ரோஜா-17

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
246
0
16
www.amazon.com
அத்தியாயம் 17: காதல் வெறும் கனவா

ராகவின் அம்மா காவியாவிற்காக தாங்கள் வாங்கி இருந்த மோதிரத்தை வைத்து இருந்த டப்பாவை திறக்க, அதில் ஒரு அழகான சிறிய வைரம் ஜொலித்துக் கொண்டு இருக்க நேர்த்தியான ஒரு தங்க மோதிரம் இருந்தது. 💍 அதை பார்த்தவுடனே கண்டிப்பாக அது காஸ்ட்லியான மோதிரம் தான் என்று புரிந்து கொண்ட காவியா ஆச்சரியத்துடன் ராகவை பார்த்து கொண்டு இருக்க, அவளைப் பார்த்து புன்னகைத்த ராகவ்; கையில் அந்த மோதிரத்தை எடுத்து கொண்டு காவியாவின் மீண்டும் மண்டியிட்டவன், காவியாவின் முன் தன்னுடைய ஒரு கையை நீட்டினான்.

அவன் நீட்டிய கரத்தின் மீது தன்னுடைய வலது கையை வைத்துவிட்டு வெட்கத்துடன் புன்னகைத்தாள் காவியா. 🤩 ☺️ அவளுடைய கையை காதகுடன் பற்றி கொண்ட ராகவ், அவளுடைய மோதிர விரலில் அந்த வைரக்கல் பதித்த மோதிரத்தை அணிவித்தான். 😍 🥰 ❤️

காவியாவை அவளைப் பார்த்து புன்னகைத்த ராகவ்; கையில் அந்த மோதிரத்தை எடுத்து கொண்டு காவியாவின் மீண்டும் மண்டியிட்டவன், காவியாவின் முன் தன்னுடைய ஒரு கையை நீட்டினான்.

அவன் நீட்டிய கரத்தின் மீது தன் வலது கையை வைத்துவிட்டு வெட்கத்துடன் புன்னகைத்தாள் காவியா. 🤩 ☺️ அவளுடைய கையை காதகுடன் பற்றி கொண்ட ராகவ், அவளுடைய மோதிர விரலில் அந்த வைரக்கல் பதித்த மோதிரத்தை அணிவித்தான். 😍 🥰 ❤️

அங்கிருந்த அனைவரும் அந்த ஜோடிகளை பார்த்து உற்சாகத்தில் ஆரவாரம் செய்து கைதட்டி மகிழ்ந்தார்கள். 😍 🥰 காவியா அவள் வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறாள் என்பதால், இனியாவது ராகவுடன் ஆன அவள் வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து மகிழ்ந்த காமல் மனதார அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்தித்துக் கொண்டான். 🙏

பாவம் நம் கயல் தான் அனைவரையும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். எப்படியாவது இன்று கமலுடன் காவியாவின் நிச்சயதார்த்தத்திற்கு வந்து, அவனுடன் இணக்கமாகிவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் இங்கே வந்து இன்னொரு புதிய பிரச்சினையை உருவாக்கி அவன் தன்னுடன் சண்டை போட்டு தன்னை ஒதுக்கும் அளவிற்கு ஆகிவிட்டது என்று நினைத்து வேதனை பட்டாள் அவள். 💔 அந்த பெரிய கூட்டத்தில் அவள் மட்டும் தனித்து விடப்பட்டதை போல் அவளுக்கு தோன்றியது.

இப்போது ராகவும், காவியாவும் மேடையில் நின்று தனியாகவும் அந்த பங்க்ஷனுக்கு வந்தவர்களுடனும் இணைந்து விதவிதமாக போட்டோக்கள் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். இது நிச்சயதார்த்தமாக இருந்தாலும் அவர்கள் இருவரின் நட்பு வட்டாரமும் பெரிது என்பதால் திருமணத்திற்கு வர முடியாமல் இருக்கும் அனைவரும் இப்போது வந்து இருந்ததால் ஏராளமான கிப்ட்டுகள் வந்து குவிந்தது.

காவியாவின் நண்பர்களும், ராகவின் குடும்பத்தினரும், சொந்தக்காரர்களும் அங்கே வந்திருந்தவர்களை கவனித்து கொண்டு இருந்தார்கள். அதையெல்லாம் தன் குடும்பத்தினருடன் முதல் வரிசையில் யாரோ வீட்டு விசேஷத்திற்கு வந்திருப்பவர்களை போல அமர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த காவியாவின் குடும்பத்தினர்ள் தங்களுக்குள், “இதுல காவியாக்கும் வந்த கிப்ட் எல்லாம் இருக்கும் தானே... அத எல்லாம் தனியா நம்ம கிட்ட தருவாங்களா இல்ல இவங்களே அமுத்தி வச்சுக்குவாங்களா..?? நம்மகிட்ட குடுத்தா ஏதாவது உருப்படியான பொருளா இருந்தா நம்ம கிளம்பும்போது ஊருக்கு எடுத்துட்டு போலாம்." என்று தங்களுக்குள் பேசிக கொண்டு இருக்க, காவியாவின் அண்ணி பார்க்கவி, “மேடையில பாவம் அவ மட்டும் தனியா நிக்கிறா. ராகவ் தம்பியோட குடும்பத்துல இருக்கிறவங்க எல்லாரும் இருக்காங்க. நீங்களாவது போய் காவியா கூட நில்லுங்க." என்று தன் கணவன் ராஜேஷிடம் சொன்னாள்.

ராஜேஷ்: இப்ப என்ன எதுக்கு டி அங்க போய் நிக்க சொல்ற..?? அவளுக்கு எல்லாம் நம்ம யாரும் தேவையில்லை. அவளே எல்லாத்தையும் பாத்துக்குவா. எனக்கே காலு ரொம்ப வலிக்குது. வந்துக்கு வா முதல் பந்தியில போய் உட்கார்ந்து நல்லா சாப்பிட்டு வருவோம்.

ஈஸ்வரி: நம்ம எதுக்கு கால் கடக்க தேவையில்லாம அங்க போய் நிக்கணும்..??? நீ வாயும் வயிறுமா இருக்குற பொண்ணு. நேரத்துக்கு சாப்பிடணும்.

செந்தில் குமார்: இது காவியாவிற்கு நடத்துற முதல் விசேஷம். இதுலயும் நம்ம பெருசா எதுவும் பண்ணல. யாருமே வராத மாதிரி இருக்கு. இங்கே எத்தனை பேர் இருக்காங்க. ஆனா நமக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க கூட இல்லை. இத பாக்கவே எனக்கு கஷ்டமா இருக்கு.

ஈஸ்வரி: “அட விடுங்க. அவங்க வரலைன்னு இப்ப என்ன குறைஞ்சு போயிடுச்சு..?? அவங்க எல்லாரையும் இங்க வர வச்சா தங்கறது திங்கறதுன்னு எல்லா செலவையும் யார் பார்க்கிறது...?? அவங்க எல்லாம் வராதே நல்லது தான். அங்க பாருங்க உங்க பொண்ண அவன் கூட சேர்ந்து எப்படி கூத்தடிச்சிட்டு இருக்கான்னு. இந்த பக்கம் லவ்வர்னு ஒருத்தன். அந்தப்பக்கம் பிரண்டுன்னு ஒருத்தன். கடைசில எவன் கூட வாழ போறான்னு தான் எனக்கு தெரியல." என்றவள், நரம்பில்லாத நாக்கு என்பதால் தன் இஷ்டத்திற்கு காவியாவை பற்றி குறை சொல்லிவிட்டு தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சாப்பிடுவதற்காக சென்றுவிட்டாள்.

மேடையில் ராகவுடன் நின்று கொண்டு இருந்த காவியா தன் குடும்பத்தினருடன் இணைந்து ஒரே ஒரு புகைப்படமாவது எடுக்கலாம் என்ற ஆசையில் அவர்களை தேட, அவர்கள் அங்கே இல்லாமல் போனதால் கமலை அழைத்து அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று பார்த்து வரச் சொன்னாள். இதற்கிடையில் அவளது குடும்பம் இப்படி பட்டும் படாமல் இருப்பதால் காவியாவிடம் ராகவவின் பெற்றோர்கள் உங்கள் குடும்பத்தினருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா என்றெல்லாம் கூட கேட்டு விட்டார்கள் அத்தனையும் சமாளித்த காவியா தன் குடும்பத்தினருக்காக காத்திருக்க, “அவங்க சாப்பிட்டுட்டு இருக்காங்க." என்று கமல் வந்து சொல்லவும், “ஓ பரவால்ல அண்ணி பிரக்னண்டா இருக்காங்கல்ல அதான் அவங்கள கூட்டிட்டு சாப்பிட போய் இருப்பாங்க." என்று அனைவரிடமும் சொல்லி சமாளித்தாள் காவியா.

ஆனால் உண்மையில் ஏற்கனவே தன் குடும்பத்தினர்கள் தனக்காக எதுவும் செய்யவில்லை. இப்படி தானே அனைத்தையும் அரேஞ்ச் செய்து நடத்தும் இந்த விசேஷத்தில் தனக்கு துணையாக கூட இருக்க மாட்டேன் என்கிறார்களே என்ற வருத்தம் அவளுக்குள் இருக்க, அவள் சொல்லாமலேயே அதை புரிந்து கொண்ட கமல் அவள் அருகே சென்று, “நான் இருக்கேன்." என்று சொல்லாமல் சொல்வதைப் போல மேடையை விட்டு கீழே இறங்குவதற்கு முன் அவள் தோள்களில் மெதுவாக தட்டிவிட்டு சென்றான்.

தன்னை புரிந்து கொண்டு தனக்காக அனைத்தையும் செய்து கொடுக்கும் காதலன் இப்போது கணவனாக போகிறான். எப்போதும் தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் நண்பர்கள் கூட்டம் இருக்கும் போது சரியில்லாத குடும்பத்தை பற்றி நினைத்து ஏன் வருத்தப்பட வேண்டும் என்று நினைத்த காவியா, அவர்களைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு தன் பங்க்ஷனை என்ஜாய் செய்ய தொடங்கினாள்.

கயல் ஓரமாக ஒரு சாரில் அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளை இங்கே அழைத்து வந்த அவளுடைய கமல் மாமா, கயலா அப்படின்னா யாரு..?? என்று கேட்கும் அளவிற்கு தன்னுடன் வந்தவளை மறந்து விட்டான் போல என்று நினைத்து அவள் விரக்தியில் இருந்தாள். 💔

அப்போது இ சேனலில் செய்தி சேகரிப்பாளராக வேலை பார்க்கும் மனோஜ் என்ற மனோ, கயலின் அருகே வந்து அமர்ந்தான். அவனும் கமலின் நண்பன் என்பதால் அவனைப் பார்த்து ஃபார்மாலிட்டிக்காக புன்னகைத்தாள் கயல்விழி. 😁 😁 😁

மனோ: எங்கங்க உங்க மாமா என் மச்சான் கமல காணோம்...?? ஏன் நீங்க மட்டும் இங்க தனியா இருக்கீங்க..??

கயல்: அவன் பிஸியா இருக்கான். டைனிங் ஹால்ல இருக்காங்க உள்ள போய் பாருங்க.

மனோ: ok. நீங்க சாப்டீங்களா...???

கயல்: யாரோ ஒருவன் கூட தன்னைப் பார்த்து ஒரு மரியாதைக்கு சாப்டியா என்று கேட்கிறான். ஆனால் தன்னை அழைத்துக் கொண்டு வந்தவன் தன்னை அம்போ என விட்டுவிட்டு சென்றதை நினைத்து பார்த்தவள், “ஆ... நான் சாப்பிட்டேன்." என்று பொய் சொன்னாள்.

அதனால் அவளிடம் விடை பெற்றுக் கொண்ட மனோ, தன் நண்பர்களை பார்க்க டைனிங் ஹாலிற்கு சென்றான். அங்கே வந்திருந்தவர்களை கமலும் அவன் நண்பர்கள் கூட்டமும் நன்றாக கவனித்துக் கொண்டு இருந்தார்கள். “அதான் இவங்க எல்லாம் மாறி மாறி வேலை செய்றாங்களே நம்ம முதல்ல நம்ம வயித்த சமாதானப்படுத்துவோம்." என்று நினைத்த மனோஜ், பந்தியில் அமர்ந்து சாப்பிட தொடங்கி விட்டான்.

அப்போது அவனை கவனித்த கமல், “வந்தது வராதுமா வயித்த நெப்புரத்துக்கு வந்து பந்தியில உட்காந்துட்டான் டா இவன்." என்று சந்துருவிடம் சொல்ல, அனைவரும் சிரித்தார்கள். அவர்களைப் பார்த்து முறைத்த மனோஜ், “போதும் டா என்ன கலாய்க்கணும்னா மட்டும் கும்பலா கிளம்பி அப்படியே வந்துருவீங்க." என்றவன் கமலை பார்த்து, “உன் ஆள கூட்டிட்டு வந்து நீ அங்க தனியா விட்டுட்டு இங்க வந்து போறவரவங்கள கலாய்ச்சிட்டு இருக்கியா ப்ரோ..?? பாவம் அந்த பொண்ணுக்கு போர் அடிக்காதா..??" என்று கேட்க, “கயல்விழிய பத்தி நீ ஏன் டா கவலைப் படுற..??? ஆபீஸ்க்கு ஒரு நாள் கமல பாக்க கயல் வந்தப்ப அவ யாருன்னு தெரியாம நீ அவளை சைட் அடிச்சு என்கிட்டயே அவ நம்பர் கேட்டவன் தானே...!! இன்னும் உனக்கு அவ மேல பாசம் பொங்குதோ..??" என்று கேட்ட அனு கமலிடம், “என்ன கமலு இதெல்லாம் கேக்க மாட்டியா நீ..??" என்று கொளுத்திப் போட்டாள்.

கமல்: “அட விடு டி. இவன் கடக்கிறான் சின்ன பையன். நீ போய் அவளை சாப்பிட கூட்டிட்டு வா." என்று சொல்லிவிட்டு சென்றுவிட, கயலைத் தேடிக் கொண்டு வந்த அனு அவளை சாப்பிட வரும்படி அழைத்தாள். இப்போதும் கமல் வராததால், “நான் சாப்பிட்டேன்." என்று சொல்லி அவளை அனுப்பி விட்டாள் கயல். அதனால் மீண்டும் டைனிங் ஹால் இருக்கு வந்த அனு அவனிடம் கயல் சாப்பிட்டு விட்டதாக சொல்ல, “நான் கேட்டப்பவே அவங்க சாப்பிட்டேன்னு தான் சொன்னாங்க." என்று முந்தி கொண்டு சொன்னான் மனோஜ்.

அதுக்குள்ள அவ சாப்பிட்டாளா என்று நினைத்த கமல், “அப்புறம் ஏன் டா இவ்வளவு நேரம் சொல்லாம இருந்த..???" என்று கேட்க, “உன்ன என்கிட்ட கோர்த்து .விட்டு வேடிக்க பாக்க பாத்தாள்ல அந்த அணு.. அதான் அவ போய் கேட்டுட்டு வரட்டும்னு விட்டுட்டேன் ப்ரோ." என்று சொல்லிவிட்டு மனோஜ் சிரிக்க, “இந்த குண்டு பயபுள்ள என்னென்ன வேலை பார்ப்பது பாத்தியா...??" என்ற அனு நங்கென்று அவன் தலையில் கொட்டி விட்டு ஓடி விட, “பாரு ப்ரோ.. இந்த அனு எப்ப பாத்தாலும் இப்படி தான் என் தலையில கொட்டிட்டு ஓடுறா. அப்புறம் நான் வளராம போயிட்டா என்ன பண்றது...??" என்று கமலிடம் மனோஜ் கேட்க, அவன் தொப்பை வயிற்றின் மீது விளையாட்டாக தட்டியவன், “நீ தான் இதன் நல்லா சாப்பிட்டு வழக்கறல்ல இது போதும் வாடா. என் கூட சேந்து செகண்ட் ரவுண்டு சாப்பிடு." என்று சொல்ல, “சாப்பிடுற விஷயத்தை பொறுத்த வரைக்கும் நான் எப்பவுமே அவைலபிள் ப்ரோ. வா போலாம்." என்ற மனோ அவன் தோளில் கை போட்டு சாப்பிட அழைத்துச் சென்று விட்டான்.
- மீண்டும் காதல் வாசம் வீசும் 🌹
 

Author: thenaruvitamilnovels
Article Title: ரோஜா-17
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.