“என்ன எதுவுமே பதில காணோம் எப்ப பார்த்தாலும் அப்படி இல்ல அப்படி சொல்லாதீங்கன்னு சொல்லுவ” என்று விக்ரம் கேட்க, ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்தாள் சனந்தா. அவள் கொடுத்த ஸ்நாக்ஸை சாப்பிட்டு விட்டு அவளுடைய வலது பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான் அவளுக்கு நெருக்கமாக.
அவள் அதற்கு எந்த தடையும் தெரிவிக்காமல் இருப்பதே அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. மேலும் சிறிது நேரம் இருவரும் ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருந்தனர் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமல்.
சட்டென்று சனா!!! சனா!!! என்று குரல் கொடுத்துக் கொண்டே சந்திரசேகர் மேலே அவளது அறையை நோக்கி வருவதை உணர்ந்த சனந்தா பால்கனியின் நுழைவாயிலில் போடப்பட்டிருக்கும் திரையை இழுத்து விட, விக்ரம் எதையோ பேச போக, சனந்தா அவனது வாயை அவளது இடது கையால் மூடி, ஷ்ஷ்ஷ் என்று கூறினாள் சனந்தா.
“ஏங்க அவ ரொம்ப நேரம் வேலை பார்த்து இருந்துட்டு தூங்கிட்டா…. நீங்க போய் எழுப்பாதிங்க” என்று லக்ஷ்மி குரல் கொடுக்க, “ஆமா மா சுருண்டு படுத்திருக்கா எப்பவும் போல… பெட்ஷீட்க்கு உள்ள இருக்காளான்னு தெரியல அந்த மாதிரி படுத்து இருக்கா” என்று சந்திரசேகர் கூறிக் கொண்டே சென்றார்.
சனந்தா மெதுவாக திரையை விலக்கி விக்ரமின் முகத்திற்கு மிக அருகில் அவளுடைய முகத்தை திருப்பி பார்க்கவும், சந்திரசேகர் கதவை மூடிக் கொண்டு சென்று விட்டார் என்பதை உறுதி செய்த பின், அவள் கண்களை மூடி பெரும் மூச்சு விட்டு விக்ரமை பார்க்க, அவளுக்கு மிக அருகில் அவன் இருப்பதை உணர அவளுக்குள் ஏதோ பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்ந்தாள்.
அதிலும் அவள் அவனது வாயை மூடிக் கொண்டு இருந்ததை பார்க்கவும் சட்டென்று அவளின் கையை விடுவித்து கொண்டாள். இவ்வளவு நேரம் இல்லாத தயக்கம் தற்போது அவளை சூழ்ந்து கொண்டது, அத உணர்ந்த விக்ரம் விரிவாக புன்னகைத்தான், அவளின் முக ஓட்டத்தை பார்த்துக் கொண்டே. அவன் எப்பொழுது விரிவாக சிரித்தாலும் அவனுடைய கண்ணும் சேர்த்து சிரிக்கும் அழகு உடையவன்.
சனந்தா அவனின் சரிப்பை ரசித்து கொண்டிருக்க, மேலும் அவனுடைய மச்சம் அவனின் அழகைக் கூட்டியது. விக்ரம் என்ன என்று இரு உருவங்களை உயர்த்தி கேட்க, சனந்தா சுய நினைவுக்கு வந்து ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்தாள் வெட்கத்துடன் புன்னகைத்து.
“சரி உங்க அப்பா வந்து நம்ம ரெண்டு பேரையும் இப்படி பார்த்திருந்தா என்ன ஆகும்??” என்று விக்ரம் குறும்பாக கேட்க, “இந்த நேரத்துல தன் பொண்ணோட ரூம்ல ஒரு வயசு பையன் இருக்கான்னா எந்த அப்பாவுக்கும் கோபம் கண்டிப்பா வரும் தானே” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா நான் கூட ஏதோ என்னை வெட்டி போட்டிருவாரோ இல்ல அட்லீஸ்ட் அடிச்சு ஆவது போடுவாரோன்னு சொல்லுவன்னு எதிர்பார்த்தனே” என்று விக்ரம் கேலியாக கூறவும், “அப்பாவுக்கு கோவம் வரும் ஆனா, அவ்ளோ கோபம் எல்லாம் வராது அவர் ரொம்ப சாஃப்டான ஆளு” என்று சனந்தா கூறினாள்.
சனந்தா என்ன தான் பதில் கூறிக் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது அவளுடைய பார்வை அவனது மச்சம் மீது இருக்க, “என்ன இந்த கண்ணே பார்த்துட்டு இருக்க??” என்று அவனது இடது கண்ணை காட்டி விக்ரம் கேட்கவும், சனந்தா மெல்லிய புன்னகையுடன், “எனக்கு உங்க மச்சம் ரொம்ப பிடிக்கும்…. அதுலயும் நீங்க விரிவா சிரிச்சீங்கன்னா அந்த மச்சமும் சேர்ந்து சிரிக்கிற மாதிரி எனக்கு தோணும்… ரொம்ப அழகா இருக்கும்” என்று சனந்தா அவனை வர்ணித்து கொண்டிருந்தாள் அவளையும் மீறி. அதை விக்ரம் கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
“எது அழகா இருக்கும் மச்சமா இல்ல…” என்று விக்ரம் இழுக்க, “இல்ல…” என்று சனந்தா கேட்க, “இல்ல என்னை சொல்றியோன்னு ஆசைப்பட்டேன்” என்று விக்ரம் கூறவும், “ம்ம்… ஆசை தான்… ஆனா அது உண்மை தான்” என்று சனந்தா கூற, விக்ரம் அவனது கையை பின்னங்கழுத்தில் வைத்து முகத்தை திருப்பிக் கொண்டு வெட்கத்துடன் புன்னகைத்தான்.
“விக்ரம்!!! இங்க இருந்தா இதுக்கு மேல உன்ன கண்ட்ரோல் பண்ண முடியாது வா ஓடிரலாம்” என்று விக்ரம் மனதில் நினைத்து கொண்டு, சனந்தாவின் தலை மீது கையை வைத்து, “பூனைக்குட்டி குட் நைட் நாளைக்கு காலைல பார்க்கலாம்” என்று விக்ரம் கூறி எழவும், “நாளைக்கு காலையில கல்யாணத்துக்கு போறோம் நானும் கௌதமும்…. ம்ம்… நீங்களும் வரீங்களா??” என்று சனந்தா தயக்கத்துடன் கேட்டாள்.
விக்ரம் அவளை கேள்விக் குறியாக பார்க்க, “இல்ல வரீங்கனா காலையில சீக்கிரம் எழுப்ப சொல்லுவேன் கௌதமை… இல்லனா நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க நாங்க போயிட்டு வந்துடுறோம்” என்று சனந்தா தயக்கத்துடன் பேச, அவனும் அவளுடன் சென்றால் அவள் சந்தோஷப்படுவாள் என்பதை உணர்ந்து விக்ரம் அவளை பார்த்து, “நானும் வரேன் போய் தூங்கு” என்று கூறி விகாஷின் அறைக்கு சென்றான் விக்ரம்.
விக்ரம் அவளின் தலையில் கை வைத்து அவன் பேசியது, அவளுக்கு மிக அருகில் இருந்தது, அவன் விரிவாக சிரிக்கும் போது அவனுடைய மச்சம் இவை அனைத்தும் அவளை ஆட்கொண்டது. அவளவனின் நினைவுகளில் சிறிது நேரம் சிலாகித்துக் கொண்டே உறங்கிப் போனாள் சனந்தா.
விக்ரம் மனதில் நிறைய குழப்பங்களும் மனவலியும் இருந்தாலும் சனந்தா சார்ந்த விஷயங்களில் ஏதோ தெளிவு கிடைத்தது போல் உணர்ந்தான். மேலும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு அவனுடைய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு உறங்கினான்.
மறுநாள் விடியலே சனந்தாவுக்கு மிகுந்த உற்சாகத்துடன் விடிந்தது. அவள் தன்னை பார்த்து பார்த்து தயாராகினாள். சனந்தாவின் அம்மா நேற்று எவ்வளவு முறை கூறினாலும், தான் புடவை கட்ட மாட்டேன் என்று உறுதியாக இருந்தாள். ஆனால் இப்பொழுது என்னவோ புடவையை உடுத்துக் கொண்டு தயாரானாள்.
ஒரு வித பதப்பதப்புடன் சனந்தா வெளியே வரவும், அங்கே கௌதமும் விக்ரமும் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர். “எவ்ளோ நேரம் டி எடுத்துப்பா ரெடி ஆக…. வா போலாம்… நம்ம கிளம்பி போறதுக்குள்ள அவங்களுக்கு கல்யாணமே முடிஞ்சிடும்” என்று கௌதம் வசை பாடி கொண்டு கீழே இறங்க, சனந்தாவின் மனநிலையோ வேறு.
சனந்தா விக்ரமை பார்க்க, அவன் இளம்பச்சை நிறத்தில் சட்டை மற்றும் வேஸ்டி அணிந்துக் கொண்டிருந்தவனை அவள் கண் எடுக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். சனந்தா முதல் முறையாக விக்ராமை வேஷ்டியில் பார்க்க அவளுக்கு ஆணழகன் போல் தெரிந்தான்.
சனந்தாவை முதல் முறையாக புடவை கட்டி பார்க்க அவனுக்கு அவள் அழகு தேவதை போல் தெரிந்தாள். சனந்தா அவள் முகத்திற்கு செய்திருக்கும் ஒப்பனை அவளின் அழகை மேலும் கூட்டியது. அவள் ஆரஞ்சும் அல்லாது சிவப்பும் அல்லாத ஒரு நிறத்தில் புடவை கட்டிக் கொண்டு இருக்க, அது அவளின் நிறத்தை சற்று மெருகேற்றி காட்டியது.
விக்ரம் அவனின் கண்களில் அவளை படம் எடுத்துக் கொண்டே தயங்கி நின்று கொண்டிருக்கும் சனந்தாவின் அருகில் வரவும், சனந்தாவின் இதயம் படபடத்தது. “சனா நேரமாகுது டி வா போகலாம்” என்று கௌதம் கீழ இருந்து கத்தவும் இருவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மெதுவாக கீழே இறங்கினர்.
“ஹே சனா நேத்து புடவை கட்டுன்னு சொன்னா மாட்டவே மாட்டேன்னு சொன்ன… இன்னிக்கு என்னடான்னா கட்டிட்டு வந்து இருக்க…. இரு நான் உனக்கு பூ வெச்சிருக்கேன் அத வெச்சுட்டு போ” என்று லக்ஷ்மி அவளை நிறுத்தி அவளின் அழகை மேலும் கூட்டும் வகையில் மல்லி பூவை சனந்தாவின் தலையில் வைத்து விட்டார் லக்ஷ்மி.
“ஹே… விக்ரம்…. வேஷ்டி சட்டை நல்லா இருக்கே… உனக்கு தான் கௌதம் காலையில வந்து வேஷ்டி வேணும்னு கேட்டானா….. நல்லா இருக்குப்பா உங்களை பேண்ட் ஷர்ட்ல பார்த்து இப்படி பார்க்கிறதும் நல்லா இருக்கு…. மூனு பேரும் லட்சணமா இருக்கீங்க” என்று லக்ஷ்மி கூற, விக்ரம் புன்னகைத்து தேங்க்ஸ் என்று கூறினான். “சரிமா நாங்க போயிட்டு எப்ப வரோம்னு உனக்கு ஃபோன் பண்றேன்” என்று சனந்தா கூறி, மூவரும் கல்யாணத்துக்கு புறப்பட்டனர்.
கௌதம் வண்டி ஓட்ட, விக்ரம் முன்னிருக்கையில் கௌதமுக்கு எதிரில் அமர்ந்து கொள்ள, சனந்தா விக்ரமுக்கு நேராக பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். கௌதம் மற்றும் விக்ரம் பொதுவாக பேசிக் கொண்டு இருக்க, அவ்வப்போது விக்ரம் வெளியில் இருக்கும் கண்ணாடி மூலமாக சனந்தாவை ரசித்துக் கொண்டு தான் இருந்தான். அதை அவளும் கவனிக்காமல் இல்லை, சனந்தாவும் விக்ரமை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
“என்னடி வாய மூடிட்டு வர இந்நேரம் ஏதாவது ஒன்னு பேசுவ… என்ன அமைதியா வர” என்று கௌதம் கேட்க, ஒன்னும் இல்லடா என்று கூறி அமைதி ஆகிவிட்டாள் சனந்தா.
“சரி சனா கல்யாணம் முடிச்சுட்டு அங்கயே சாப்பிட்டு என்னை ஆஃபீஸ் கிட்ட டிராப் பண்ணிடு… நான் சீனியர் கூட சேர்ந்து கம்பெனிக்கு போயிட்டு அங்க இன்டர்வியூ அரேஞ்ச் பண்ணி இருக்காங்க அதை முடிச்சுட்டு நான் ஃபோன் பண்றேன்… முடிஞ்சா வந்து கூட்டிட்டு போ இல்லேன்னா நானே வேணும்னாலும் வரேன்” என்று கௌதம் கூறவும், “அப்படியாடா சூப்பர் டா… சரி நீ முடிச்ச உடனே சொல்லு நானே வந்து உன்னை பிக் பண்ணிக்கிறேன்” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்… சரி முடிச்சிட்டு நான் உனக்கு ஃபோன் பண்றேன்” என்று கௌதம் கூறவும், “சரி பண்ணு… இன்டர்வியூ ஒழுங்கா பண்ணு சரியா… ஆல் தி பெஸ்ட்” என்று சனந்தா கூற, தேங்க்யூ!!! என்று கௌதம் கூறினான். விக்ரமும் அவன் பங்குக்கு ஆல் த பெஸ்ட் என்று வாழ்த்து தெரிவிக்க தேங்க்யூ சோ மச் என்று புன்னகையுடன் கூறினான் கௌதம்.
பேசிக் கொண்டே மண்டபத்திற்கு வந்தடையவும், “சரி நீங்க ரெண்டு பேரும் இங்க இறங்கி உள்ள போங்க நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன்” என்று கௌதம் கூறவும், “வாலட் பார்க்கிங் கொடுத்து விடலாமே கௌதம், மண்டபத்தில இருக்கும் தான” என்று விக்ரம் கேட்க,
“இருக்கும் தான் விக்ரம்… நம்ம பார்க் பண்ணா உடனே எடுக்கிற மாதிரி இருக்கும்… அதுவுமில்லாம காலியா தானே இருக்கு நானே போட்டுட்டு வந்துடுறேன்” என்று கௌதம் கூறவும் சரி என்று சனந்தா மற்றும் விக்ரம் இறங்கிக் கொண்டனர்.
இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்து, “உள்ள போலாமா??” என்று விக்ரம் கேட்க, சரி என்று தலை அசைத்தாள் சனந்தா. “வேணா கௌதம் வர வரைக்கும் இருக்கலாமா??” என்று விக்ரம் கேட்க, “இல்ல பரவால்ல உள்ள போலாம்” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்… அது ஒன்னும் இல்லடா என்னோட ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க நான் அவங்க கிட்ட போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வருவேன் ஏன்னா செந்தில் எங்க காலேஜ்மெட் இல்லையா அதனால…. அது வரைக்கும் நீ எப்படி…” என்று விக்ரம் தயக்கத்துடன் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் பரவால்ல நான் உள்ள உக்காந்து இருக்கேன் அதுக்குள்ள கௌதம் கார் பார்க் பண்ணிட்டு வந்துருவான்” என்று சனந்தா கூற சரி என்று இருவரும் உள்ளே சென்றனர்.
இருவரும் ஒன்றாக மண்டபத்திற்குள் செல்லவும் அதை முதலில் விக்ரமின் நண்பர்கள் பார்த்து, விக்ரமை பார்த்த உற்சாகத்தில் விக்ரம்!! விக்ரம்!!! என்று கூச்சலிட்டனர். அதை பார்த்து சனந்தா, “நீங்க போங்க நான் போய் ரோகிணி அக்காக்கு ஹாய் சொல்லிட்டு உட்கார்ந்திக்குறேன்” என்று கூறி சென்றாள் சனந்தா.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
அவள் அதற்கு எந்த தடையும் தெரிவிக்காமல் இருப்பதே அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. மேலும் சிறிது நேரம் இருவரும் ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருந்தனர் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமல்.
சட்டென்று சனா!!! சனா!!! என்று குரல் கொடுத்துக் கொண்டே சந்திரசேகர் மேலே அவளது அறையை நோக்கி வருவதை உணர்ந்த சனந்தா பால்கனியின் நுழைவாயிலில் போடப்பட்டிருக்கும் திரையை இழுத்து விட, விக்ரம் எதையோ பேச போக, சனந்தா அவனது வாயை அவளது இடது கையால் மூடி, ஷ்ஷ்ஷ் என்று கூறினாள் சனந்தா.
“ஏங்க அவ ரொம்ப நேரம் வேலை பார்த்து இருந்துட்டு தூங்கிட்டா…. நீங்க போய் எழுப்பாதிங்க” என்று லக்ஷ்மி குரல் கொடுக்க, “ஆமா மா சுருண்டு படுத்திருக்கா எப்பவும் போல… பெட்ஷீட்க்கு உள்ள இருக்காளான்னு தெரியல அந்த மாதிரி படுத்து இருக்கா” என்று சந்திரசேகர் கூறிக் கொண்டே சென்றார்.
சனந்தா மெதுவாக திரையை விலக்கி விக்ரமின் முகத்திற்கு மிக அருகில் அவளுடைய முகத்தை திருப்பி பார்க்கவும், சந்திரசேகர் கதவை மூடிக் கொண்டு சென்று விட்டார் என்பதை உறுதி செய்த பின், அவள் கண்களை மூடி பெரும் மூச்சு விட்டு விக்ரமை பார்க்க, அவளுக்கு மிக அருகில் அவன் இருப்பதை உணர அவளுக்குள் ஏதோ பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்ந்தாள்.
அதிலும் அவள் அவனது வாயை மூடிக் கொண்டு இருந்ததை பார்க்கவும் சட்டென்று அவளின் கையை விடுவித்து கொண்டாள். இவ்வளவு நேரம் இல்லாத தயக்கம் தற்போது அவளை சூழ்ந்து கொண்டது, அத உணர்ந்த விக்ரம் விரிவாக புன்னகைத்தான், அவளின் முக ஓட்டத்தை பார்த்துக் கொண்டே. அவன் எப்பொழுது விரிவாக சிரித்தாலும் அவனுடைய கண்ணும் சேர்த்து சிரிக்கும் அழகு உடையவன்.
சனந்தா அவனின் சரிப்பை ரசித்து கொண்டிருக்க, மேலும் அவனுடைய மச்சம் அவனின் அழகைக் கூட்டியது. விக்ரம் என்ன என்று இரு உருவங்களை உயர்த்தி கேட்க, சனந்தா சுய நினைவுக்கு வந்து ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்தாள் வெட்கத்துடன் புன்னகைத்து.
“சரி உங்க அப்பா வந்து நம்ம ரெண்டு பேரையும் இப்படி பார்த்திருந்தா என்ன ஆகும்??” என்று விக்ரம் குறும்பாக கேட்க, “இந்த நேரத்துல தன் பொண்ணோட ரூம்ல ஒரு வயசு பையன் இருக்கான்னா எந்த அப்பாவுக்கும் கோபம் கண்டிப்பா வரும் தானே” என்று சனந்தா கூறினாள்.
“அப்படியா நான் கூட ஏதோ என்னை வெட்டி போட்டிருவாரோ இல்ல அட்லீஸ்ட் அடிச்சு ஆவது போடுவாரோன்னு சொல்லுவன்னு எதிர்பார்த்தனே” என்று விக்ரம் கேலியாக கூறவும், “அப்பாவுக்கு கோவம் வரும் ஆனா, அவ்ளோ கோபம் எல்லாம் வராது அவர் ரொம்ப சாஃப்டான ஆளு” என்று சனந்தா கூறினாள்.
சனந்தா என்ன தான் பதில் கூறிக் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது அவளுடைய பார்வை அவனது மச்சம் மீது இருக்க, “என்ன இந்த கண்ணே பார்த்துட்டு இருக்க??” என்று அவனது இடது கண்ணை காட்டி விக்ரம் கேட்கவும், சனந்தா மெல்லிய புன்னகையுடன், “எனக்கு உங்க மச்சம் ரொம்ப பிடிக்கும்…. அதுலயும் நீங்க விரிவா சிரிச்சீங்கன்னா அந்த மச்சமும் சேர்ந்து சிரிக்கிற மாதிரி எனக்கு தோணும்… ரொம்ப அழகா இருக்கும்” என்று சனந்தா அவனை வர்ணித்து கொண்டிருந்தாள் அவளையும் மீறி. அதை விக்ரம் கண் இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
“எது அழகா இருக்கும் மச்சமா இல்ல…” என்று விக்ரம் இழுக்க, “இல்ல…” என்று சனந்தா கேட்க, “இல்ல என்னை சொல்றியோன்னு ஆசைப்பட்டேன்” என்று விக்ரம் கூறவும், “ம்ம்… ஆசை தான்… ஆனா அது உண்மை தான்” என்று சனந்தா கூற, விக்ரம் அவனது கையை பின்னங்கழுத்தில் வைத்து முகத்தை திருப்பிக் கொண்டு வெட்கத்துடன் புன்னகைத்தான்.
“விக்ரம்!!! இங்க இருந்தா இதுக்கு மேல உன்ன கண்ட்ரோல் பண்ண முடியாது வா ஓடிரலாம்” என்று விக்ரம் மனதில் நினைத்து கொண்டு, சனந்தாவின் தலை மீது கையை வைத்து, “பூனைக்குட்டி குட் நைட் நாளைக்கு காலைல பார்க்கலாம்” என்று விக்ரம் கூறி எழவும், “நாளைக்கு காலையில கல்யாணத்துக்கு போறோம் நானும் கௌதமும்…. ம்ம்… நீங்களும் வரீங்களா??” என்று சனந்தா தயக்கத்துடன் கேட்டாள்.
விக்ரம் அவளை கேள்விக் குறியாக பார்க்க, “இல்ல வரீங்கனா காலையில சீக்கிரம் எழுப்ப சொல்லுவேன் கௌதமை… இல்லனா நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க நாங்க போயிட்டு வந்துடுறோம்” என்று சனந்தா தயக்கத்துடன் பேச, அவனும் அவளுடன் சென்றால் அவள் சந்தோஷப்படுவாள் என்பதை உணர்ந்து விக்ரம் அவளை பார்த்து, “நானும் வரேன் போய் தூங்கு” என்று கூறி விகாஷின் அறைக்கு சென்றான் விக்ரம்.
விக்ரம் அவளின் தலையில் கை வைத்து அவன் பேசியது, அவளுக்கு மிக அருகில் இருந்தது, அவன் விரிவாக சிரிக்கும் போது அவனுடைய மச்சம் இவை அனைத்தும் அவளை ஆட்கொண்டது. அவளவனின் நினைவுகளில் சிறிது நேரம் சிலாகித்துக் கொண்டே உறங்கிப் போனாள் சனந்தா.
விக்ரம் மனதில் நிறைய குழப்பங்களும் மனவலியும் இருந்தாலும் சனந்தா சார்ந்த விஷயங்களில் ஏதோ தெளிவு கிடைத்தது போல் உணர்ந்தான். மேலும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு அவனுடைய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு உறங்கினான்.
மறுநாள் விடியலே சனந்தாவுக்கு மிகுந்த உற்சாகத்துடன் விடிந்தது. அவள் தன்னை பார்த்து பார்த்து தயாராகினாள். சனந்தாவின் அம்மா நேற்று எவ்வளவு முறை கூறினாலும், தான் புடவை கட்ட மாட்டேன் என்று உறுதியாக இருந்தாள். ஆனால் இப்பொழுது என்னவோ புடவையை உடுத்துக் கொண்டு தயாரானாள்.
ஒரு வித பதப்பதப்புடன் சனந்தா வெளியே வரவும், அங்கே கௌதமும் விக்ரமும் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர். “எவ்ளோ நேரம் டி எடுத்துப்பா ரெடி ஆக…. வா போலாம்… நம்ம கிளம்பி போறதுக்குள்ள அவங்களுக்கு கல்யாணமே முடிஞ்சிடும்” என்று கௌதம் வசை பாடி கொண்டு கீழே இறங்க, சனந்தாவின் மனநிலையோ வேறு.
சனந்தா விக்ரமை பார்க்க, அவன் இளம்பச்சை நிறத்தில் சட்டை மற்றும் வேஸ்டி அணிந்துக் கொண்டிருந்தவனை அவள் கண் எடுக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். சனந்தா முதல் முறையாக விக்ராமை வேஷ்டியில் பார்க்க அவளுக்கு ஆணழகன் போல் தெரிந்தான்.
சனந்தாவை முதல் முறையாக புடவை கட்டி பார்க்க அவனுக்கு அவள் அழகு தேவதை போல் தெரிந்தாள். சனந்தா அவள் முகத்திற்கு செய்திருக்கும் ஒப்பனை அவளின் அழகை மேலும் கூட்டியது. அவள் ஆரஞ்சும் அல்லாது சிவப்பும் அல்லாத ஒரு நிறத்தில் புடவை கட்டிக் கொண்டு இருக்க, அது அவளின் நிறத்தை சற்று மெருகேற்றி காட்டியது.
விக்ரம் அவனின் கண்களில் அவளை படம் எடுத்துக் கொண்டே தயங்கி நின்று கொண்டிருக்கும் சனந்தாவின் அருகில் வரவும், சனந்தாவின் இதயம் படபடத்தது. “சனா நேரமாகுது டி வா போகலாம்” என்று கௌதம் கீழ இருந்து கத்தவும் இருவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மெதுவாக கீழே இறங்கினர்.
“ஹே சனா நேத்து புடவை கட்டுன்னு சொன்னா மாட்டவே மாட்டேன்னு சொன்ன… இன்னிக்கு என்னடான்னா கட்டிட்டு வந்து இருக்க…. இரு நான் உனக்கு பூ வெச்சிருக்கேன் அத வெச்சுட்டு போ” என்று லக்ஷ்மி அவளை நிறுத்தி அவளின் அழகை மேலும் கூட்டும் வகையில் மல்லி பூவை சனந்தாவின் தலையில் வைத்து விட்டார் லக்ஷ்மி.
“ஹே… விக்ரம்…. வேஷ்டி சட்டை நல்லா இருக்கே… உனக்கு தான் கௌதம் காலையில வந்து வேஷ்டி வேணும்னு கேட்டானா….. நல்லா இருக்குப்பா உங்களை பேண்ட் ஷர்ட்ல பார்த்து இப்படி பார்க்கிறதும் நல்லா இருக்கு…. மூனு பேரும் லட்சணமா இருக்கீங்க” என்று லக்ஷ்மி கூற, விக்ரம் புன்னகைத்து தேங்க்ஸ் என்று கூறினான். “சரிமா நாங்க போயிட்டு எப்ப வரோம்னு உனக்கு ஃபோன் பண்றேன்” என்று சனந்தா கூறி, மூவரும் கல்யாணத்துக்கு புறப்பட்டனர்.
கௌதம் வண்டி ஓட்ட, விக்ரம் முன்னிருக்கையில் கௌதமுக்கு எதிரில் அமர்ந்து கொள்ள, சனந்தா விக்ரமுக்கு நேராக பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். கௌதம் மற்றும் விக்ரம் பொதுவாக பேசிக் கொண்டு இருக்க, அவ்வப்போது விக்ரம் வெளியில் இருக்கும் கண்ணாடி மூலமாக சனந்தாவை ரசித்துக் கொண்டு தான் இருந்தான். அதை அவளும் கவனிக்காமல் இல்லை, சனந்தாவும் விக்ரமை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
“என்னடி வாய மூடிட்டு வர இந்நேரம் ஏதாவது ஒன்னு பேசுவ… என்ன அமைதியா வர” என்று கௌதம் கேட்க, ஒன்னும் இல்லடா என்று கூறி அமைதி ஆகிவிட்டாள் சனந்தா.
“சரி சனா கல்யாணம் முடிச்சுட்டு அங்கயே சாப்பிட்டு என்னை ஆஃபீஸ் கிட்ட டிராப் பண்ணிடு… நான் சீனியர் கூட சேர்ந்து கம்பெனிக்கு போயிட்டு அங்க இன்டர்வியூ அரேஞ்ச் பண்ணி இருக்காங்க அதை முடிச்சுட்டு நான் ஃபோன் பண்றேன்… முடிஞ்சா வந்து கூட்டிட்டு போ இல்லேன்னா நானே வேணும்னாலும் வரேன்” என்று கௌதம் கூறவும், “அப்படியாடா சூப்பர் டா… சரி நீ முடிச்ச உடனே சொல்லு நானே வந்து உன்னை பிக் பண்ணிக்கிறேன்” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்… சரி முடிச்சிட்டு நான் உனக்கு ஃபோன் பண்றேன்” என்று கௌதம் கூறவும், “சரி பண்ணு… இன்டர்வியூ ஒழுங்கா பண்ணு சரியா… ஆல் தி பெஸ்ட்” என்று சனந்தா கூற, தேங்க்யூ!!! என்று கௌதம் கூறினான். விக்ரமும் அவன் பங்குக்கு ஆல் த பெஸ்ட் என்று வாழ்த்து தெரிவிக்க தேங்க்யூ சோ மச் என்று புன்னகையுடன் கூறினான் கௌதம்.
பேசிக் கொண்டே மண்டபத்திற்கு வந்தடையவும், “சரி நீங்க ரெண்டு பேரும் இங்க இறங்கி உள்ள போங்க நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன்” என்று கௌதம் கூறவும், “வாலட் பார்க்கிங் கொடுத்து விடலாமே கௌதம், மண்டபத்தில இருக்கும் தான” என்று விக்ரம் கேட்க,
“இருக்கும் தான் விக்ரம்… நம்ம பார்க் பண்ணா உடனே எடுக்கிற மாதிரி இருக்கும்… அதுவுமில்லாம காலியா தானே இருக்கு நானே போட்டுட்டு வந்துடுறேன்” என்று கௌதம் கூறவும் சரி என்று சனந்தா மற்றும் விக்ரம் இறங்கிக் கொண்டனர்.
இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்து, “உள்ள போலாமா??” என்று விக்ரம் கேட்க, சரி என்று தலை அசைத்தாள் சனந்தா. “வேணா கௌதம் வர வரைக்கும் இருக்கலாமா??” என்று விக்ரம் கேட்க, “இல்ல பரவால்ல உள்ள போலாம்” என்று சனந்தா கூறினாள்.
“ம்ம்… அது ஒன்னும் இல்லடா என்னோட ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க நான் அவங்க கிட்ட போய் கொஞ்ச நேரம் பேசிட்டு வருவேன் ஏன்னா செந்தில் எங்க காலேஜ்மெட் இல்லையா அதனால…. அது வரைக்கும் நீ எப்படி…” என்று விக்ரம் தயக்கத்துடன் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் பரவால்ல நான் உள்ள உக்காந்து இருக்கேன் அதுக்குள்ள கௌதம் கார் பார்க் பண்ணிட்டு வந்துருவான்” என்று சனந்தா கூற சரி என்று இருவரும் உள்ளே சென்றனர்.
இருவரும் ஒன்றாக மண்டபத்திற்குள் செல்லவும் அதை முதலில் விக்ரமின் நண்பர்கள் பார்த்து, விக்ரமை பார்த்த உற்சாகத்தில் விக்ரம்!! விக்ரம்!!! என்று கூச்சலிட்டனர். அதை பார்த்து சனந்தா, “நீங்க போங்க நான் போய் ரோகிணி அக்காக்கு ஹாய் சொல்லிட்டு உட்கார்ந்திக்குறேன்” என்று கூறி சென்றாள் சனந்தா.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 75
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 75
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.