Chapter 76

Bhavani Varun

Member
Jan 23, 2025
83
0
6
விக்ரமின் நண்பர்கள் கூச்சலிட விக்ரம் அவர்களிடம் சென்று நலம் விசாரித்தான். “எங்கடா சரவணனை காணும்??” என்று ஒருவன் கேட்க, “அவன் ஈவினிங் ரிசப்ஷனுக்கு வருவான் டா… நான் ஒரு வேலையா வந்தேன் நேத்து அதனால தான் வந்து கல்யாண அட்டென்ட் பண்ண முடிஞ்சுது” என்று விக்ரம் கூறினான்.

“அதானே பார்த்தேன் இல்லன்னா நீயாவது உன் வேலையை விட்டுட்டு இங்க ஃபங்க்ஷன்க்கு வரர்து ஆவது” என்று ஒருவன் கேலியாக கூற, “அவனை பத்தி தான் தெரியும் இல்லடா….. வேலைன்னு வந்தா அப்படித் தான் இருப்பான்னு… அவன் மட்டுமா சரவணன் கூட அப்படித் தான்” என்று விக்ரமுக்கு மற்றொருவன் பரிந்து பேசினான்.

“சரி அதெல்லாம் விடு விக்கி… கூட வந்த பொண்ணு யாரு??” என்று ஒருவன் கேட்க, “நினைச்சேன் டா நீ எப்பவுமே பொண்ணுங்கள பத்தி தான் கேட்பன்னு நினைச்சேன் டா” என்று மற்றொரு நண்பன் அவன் காலை வாரி விடவும், “ப்ச்… அதெல்லாம் விடு நீ சொல்லு விக்கி” என்று அவனுடைய கேள்வியிலேயே மும்மரமாக இருந்தான்.

விக்ரம் பட்டும் படாமலும், “அவங்க எங்க கிராமத்துக்கு வாலன்டியர் டீச்சரா வந்திருக்காங்க” என்று கூறினான். “அப்படியா… அப்புறம் ஏன் இங்க ஃபங்க்ஷனுக்கு கூட்டிட்டு வந்திருக்க நீ??” என்று அவன் கேட்க, “நான் கூட்டிட்டு வரல ரோகிணிக்கு தெரிஞ்சவங்க அதனால அவங்களும் கல்யாணத்துக்கு வந்துருக்காங்க” என்று விக்ரம் கூறினான்.

“அப்படியா அப்ப நீங்க ரெண்டு பேரும் ஏன் ஒண்ணா….” என்று அவன் கேட்பதற்குள், “அடேய் அவன் தான் என்னன்னா என்னன்னு பதில் சொல்றான்ல அதுல இருந்தே உனக்கு புரிய வேணாமா அவனுக்கு உன்கிட்ட சொல்ல விருப்பம் இல்லைன்னு” என்று இன்னொருவன் பேச, உடன் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

சனந்தா உள்ளே சென்று மணமேடையில் அமர்ந்திருந்த ரோகிணியை பார்த்து ஹாய்!!! என்று புன்னகையுடன் கூறவும், ஹாய்…. கௌதம் எங்கே?? என்று ரோகிணி கேட்க, “கார் பார்க் பண்ணிட்டு இருக்கான் வருவான்” என்று சைகையில் கூறினால் சனந்தா.

சரி நான் போய் உட்காருறேன் என்று சனந்தா கூறி இருக்கையில் அமரவும் சிறிது நேரத்தில் கௌதம் கார் பார்க் செய்து விட்டு அவளுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான். “ஆமா விக்ரம் எங்கே??” என்று கௌதம் கேட்க, “அவங்க ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க அதனால அங்க போய் இருக்காரு” என்று சனந்தா கூறவும், “ஆமால அது மறந்துட்டேன் பாரு நான்” என்று கௌதம் கூறினான்.

“சரி இங்க பாரு நம்ம ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம் வா” என்று கௌதம் அவனுடைய கைபேசியில் செல்ஃபி எடுத்தேன். “அடேய்!!! அந்த பொண்ண பத்தி நான் கேட்டா சொல்ல மாட்டேன்ற… அங்க பாரு யாரோ ஒருத்தர் அந்த பொண்ணு கூட உட்கார்ந்து ஃபோட்டோ கூட எடுத்துட்டு இருக்காங்க” என்று அவன் மறுபடியும் விக்ரமிடம் சனந்தாவை காட்டி கேட்கவும், விக்ரம், சனந்தா இருக்கும் இடத்தை பார்த்து பெரு மூச்சு விட்டு “அந்த பொண்ணோட அண்ணா டா” என்ற விக்ரம் கூறவும், அவன் வாயை மூடிக்கொண்டான்.

“இவ்வளவு பெருசா ஒரு அண்ணா இருந்தா நான் எதுக்கு தங்கச்சியை பத்தி கேட்க போறேன்” என்று அவன் கூறவும் அனைவரும் சிரித்து விட்டனர் விக்ரம் உட்பட. முகூர்த்த நேரம் வரவும் செந்தில் அக்னி சாட்சியாக ரோகிணியை மணம் முடித்தான். சூழ்ந்து இருந்த அனைவரும் மணமக்களை மனதார வாழ்த்தினர். சரியாக தாலி கட்டும் நேரத்தில் கௌதம், சனந்தா அவளுக்கு பக்கத்தில் விக்ரமும் வந்து சேர்ந்து மணமக்களை பூக்களைத் தூவி வாழ்த்தினர்.

என்னமோ இனம் புரியாத உணர்வு விக்ரம் மற்றும் சனந்தாவுக்கு மட்டுமே புரிந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு மணமேடையில் நடந்த திருமணத்தை ரசித்துக் கொண்டும் புன்னகைத்துக் கொண்டும் இருந்தனர். அந்த புன்னகைக்கு காரணம் இருவர் மட்டுமே அறிந்த ஒன்று.

சனந்தாவிற்கு விக்ரமுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மனது முழுக்க நிறைந்திருந்தாலும், அவனுடைய நட்பு வட்டாரத்தை அவனே இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் மட்டுமே சந்திப்பதை புரிந்து கொண்டு அவனை தொந்தரவு செய்யாமல் கௌதமுடன் நேரத்தை செலவழித்துக் கொண்டு இருந்தாள்.

“சரி கொஞ்சம் நேரத்துல கூட்டம் குறைய ஆரம்பிச்சிரும் அதுக்கு அப்புறமா நம்ம போய் ஃபோட்டோ எடுத்துக்கலாம் அதுவரைக்கும் உட்கார்ந்துக்கலாம் வா” என்று கௌதம் கூறவும், சனந்தா மற்றும் கௌதம் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.

“சனா திரும்பி நம்ம ரீசர்ச் பத்தி எனக்கு ஒரு அவுட்லைன் சொல்லு நான் அப்படியே கேட்டுக்குறேன்… அதுல இருந்து தான் நிறைய கேள்வி கேப்பாங்க அப்படின்னு சீனியர் சொன்னாரு” என்று கௌதம் கூறவும் சனந்தாவும் அவர்களது ரீசர்ச் பற்றி கூறினாள்.

“நீ இல்லனா நான் எல்லாம் எக்ஸாம் ஃபுல்லா ஃபெயில் தாண்டி ஆகி இருப்பேன்… உன்கிட்ட இப்படி கதை கேட்டு கதை கேட்டு எழுதினதுனால மட்டும் தான் நான் பாஸ் பண்ணி இருக்கேன்” என்று கௌதம் கூறவும், “அதுகெல்லாம் எனக்கு எவ்ளோ ஃபீஸ் தரனும் தெரியுமா??” என்று சனந்தா கேலியாக கேட்கவும்,

“ஏதோ உன்ன பத்தி பெருமையா சொல்லிட்டா போதுமே நீயும் ஓவரா பண்ண ஆரம்பிச்சுடுவியே…. சும்மா தான் சொன்னேன்” என்று கௌதம் கூற, சனந்தா அவளது தலையில் அடித்துக் கொண்டு, “உன்னை திருத்தவே முடியாது டா” என்று கூறினாள்.

“சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ வேலை தேடுறது கவிதாக்கு தெரியுமா??” என்று சனந்தா கேட்க, “இதெல்லாம் சொல்லிட்டு செய்வாங்களா…. இதெல்லாம் அவங்களுக்கு தெரியாம நம்ம பின்னால ரெடி பண்ணனும்… எப்படி இருந்தாலும் வேலைக்கு போகணும் அப்படிங்கறது தெரிஞ்ச ஒன்னு தான்…. ஆனா, இவ்ளோ சீக்கிரம் நான் பண்ணுவேன்னு நினைக்கல…. ரீசர்ச் முடிச்சிட்டு அப்படியே சீனியர்ஸ் கூட ரெண்டு வருஷம் இருந்துட்டு அதுக்கப்புறம் ஒரு ப்ராப்பர் வேலைக்கு போகலாம்னு நினைச்சேன்…. ஆனா, இப்ப கவிதா வந்து என்னோட லைஃப்ல எல்லாமே மாறிடுச்சு” என்று கௌதம் வெட்க புன்னகையுடன் கூறினான்.

“நீ என்ன வேணா பண்ணு… ஆனா, வெட்கப்படாத என்னால கண்டிப்பா அத பார்க்க முடியல” என்று சனந்தா கூறவும், “உனக்கு பொறாமை டி…” என்று கௌதம் கூறினான்.

“சரி வா அங்க கொஞ்சம் ஆளுங்க குறையுறாங்க நம்ம போய் ஃபோட்டோ எடுத்துட்டு வந்துரலாம்” என்று கௌதம் கூறவும், சனந்தா ஒருமுறை விக்ரம் எங்கே என்று பார்க்க அவன் இன்னும் அவனுடைய நண்பர்களுடன் பேசி கொண்டிருப்பது பார்த்து அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி கௌதமுடன் சென்றாள் சனந்தா.

சனந்தாவின் பார்வை சென்ற இடமும் அதிலிருந்து வந்த ஏமாற்றமும் கௌதம் உணர்ந்து விக்ரமுக்கு குறுஞ்செய்தி அனுப்ப, அவனும் அவர்களுடன் வந்து இணைந்து கொண்டான் ஃபோட்டோ எடுக்கும் நேரத்தில், அதுவும் சனந்தாவின் பக்கத்தில். அவளுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி முகம் எல்லாம் புன்னகையுடன் ஃபோட்டோக்கு போஸ் கொடுத்து, பின் ரோகிணியை அணைத்துக் கொண்டு வாழ்த்துக்கள் அக்கா என்று கூறவும், தேங்க்யூ சனா என்று கூறினார் ரோகிணி.

சரவணன் எங்கடா?? என்று செந்தில் கேட்க, சாயந்திரம் வருவான் டா என்று விக்ரம் கூற, “நீயாவது வந்தியே அதுவே பெருசு தான்” என்று செந்தில் கூறவும், “சரி மச்சான் வாழ்த்துக்கள்!!” என்று விக்ரம் கூறினான்.

அக்கா வாழ்த்துக்கள்!!! என்று கௌதம் கூற, தேங்க்ஸ் கௌதம்!! என்று ரோகிணி கூறி எல்லாரும் சாப்பிட்டு தான் போகணும் என்று உரிமையாக ரோகிணி கூறவும், “கண்டிப்பா அக்கா காலையில எந்திரிச்சது…. பசிக்குது வேற” என்று கௌதம் கூறவும் மூவரும் சிரித்து விட்டனர்.

மூவரும் மேடையில் இருந்து கீழே இறங்கவும், “விக்ரம் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்புனா தான் நான் ஆஃபீஸுக்கு போக கரெக்டா இருக்கும்… நீங்க வரீங்களா இல்ல இங்கே இருக்கீங்கனா கூட சொல்லுங்க அப்புறமா கூட சனா வந்து உங்கள பிக் பண்ணிக்குவா” என்று கௌதம் கேட்க, விக்ரம் சற்று யோசித்து, “நான் ஃபிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன் நம்ம எல்லாரும் ஒன்னாவே கிளம்பலாம்” என்று விக்ரம் கூறி, அவனுடைய நட்பு வட்டாரத்திடம் பேசிவிட்டு வந்து இவர்களுடன் உணவு அருந்திவிட்டு முவரம் புறப்பட்டனர்.

முதலில் ஆஃபீஸ்க்கு செல்ல அங்கே மகேஷ் இவர்களுக்காக காத்திருந்தான். அவன், சனந்தாவை பார்த்ததும், “ஹே சனா ஜவுளிக் கடையில இருக்கிற பொம்ம மாதிரி இருக்க!!” என்ற மகேஷ் கூறவும், சனந்தா அவளது உதட்டை பிதுக்கி, “சீனியர் அழகா இருக்கேன்னு காம்ப்ளிமென்ட் கொடுத்தா ஓகே… அட்லீஸ்ட் பொம்மை மாதிரி இருக்கேன்னு சொன்னா கூட ஓகே… ஆனா, மேனிக்குவின் மாதிரி இருக்கேன்னு சொல்றீங்களே…. இப்படி யாராவது காம்ப்ளிமென்ட் கொடுப்பாங்களா” என்று சனந்தா கேட்கவும், மகேஷ் சிரித்துக் கொண்டே, “உண்மையிலே நல்லா இருக்க போதுமா” என்று கூறினான்.

“அது சரி சும்மாவே சீனியர் சீனியர்னு சொல்லுவா இவன் என்னடான்னா இப்படி சொல்றான்… இவளும் அதை ரசிக்கிறா” என்று விக்ரம் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.

“சனா நான் காம்ப்ளிமென்ட் கொடுக்கிறது எல்லாம் இருக்கட்டும்… இந்நேரத்துக்கு எவ்வளவு காம்ப்ளிமென்ட் வந்து இருக்கும் கல்யாண மண்டபத்துல” என்று மகேஷ் கேட்கவும், “சத்தியமா சொல்றேன் சீனியர் ஒருத்தர் கூட சொல்லல நீங்க தான் முதல் ஆளு நான் நல்லா இருக்கேன்னு ஆவது சொன்னீங்க” என்று விக்ரமை ஓர கண்ணால் ஒரு எட்டு பார்த்துவிட்டு கூறினாள் சனந்தா.

என்னமா இப்படி சொல்லிட்ட?? என்று மகேஷ் கேட்கவும், விக்ரமின் முகம் மாற்றத்தை உணர்ந்த கௌதம், “சீனியர் வாங்க நம்ம போலாம் நமக்கு நேரம் ஆகூது… இவள ஜவுளிக்கடை பொம்மைன்னு சொன்னதே பெருசு தான்” என்று கூறி விக்ரமை அறிமுகப்படுத்தினான்.

“நீங்க தானா விக்ரம்… நல்லா இருக்கீங்களா?? உங்க ஊருக்கு கண்டிப்பா நான் வந்து பார்க்கணும்…. அவ்வளவு சொல்றா சனா” என்று மகேஷ் கூறவும், “கண்டிப்பா வாங்க!!” என்று பட்டும் படாமலும் விக்ரம் புன்னகையுடன் கூறினான். “ஆமா நீங்க ஏன் கல்யாணத்துக்கு வரல” என்று கௌதம் கேட்க, “வேலை தான் டா… சாயந்திரம் ஆச்சும் வர பார்க்குறேன்” என்று மகேஷ் கூறினான்.

பின் கௌதம் மற்றும் மகேஷ் இருவரும் புறப்படவும், சனந்தா மற்றும் விக்ரம் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு, “வீட்டுக்கு போலாம்னு சொல்லுவாரோ… இல்ல நம்மளே தான் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திகனும் சனா” என்று சனந்தா மனதில் யோசித்துக் கொண்டு இருந்தாள்.

“இப்ப விட்டா இன்னொரு வாய்ப்பு இந்த மாதிரி கிடைக்காது… பயன்படுத்திக்கோ டா” என்று விக்ரம் மனதில் அவனுக்கு ஊக்கமளித்துக் கொண்டு, பின் ஒரு வழியாக விக்ரம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “கௌதம பிக் பண்ற வரைக்கும் நம்ம சும்மா வெளியில எங்கேயாவது போலாமா??” என்று கேட்க, சனந்தா புன்னகையுடன், போலாமே!!!! என்று கூறினாள்.

சனந்தா வண்டியை ஓட்ட, திடீரென ஒருவன் குறுக்கே வரவும், அவள் சட்டென்று பிரேக் போட்டு அவளது இடது கையை விக்ரம் மீது வைக்கவும் அவளுக்கு பல நினைவுகள் வந்த போகவும் சனந்தாவின் முகம் மாறி கையை தலையில் வைத்துக் கொண்டாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல


எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 76
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.