Chapter 79

Bhavani Varun

Member
Jan 23, 2025
83
0
6
“அப்பா!!! நம்ம எதுக்கும் உண்மைய சொல்லிடலாம் பா… எவ்வளவு நாளைக்கு இதை மறைக்க முடியும்னு நினைக்கிறீங்க??” என்று அனு கேட்க, “எனக்கும் மறைக்கணும்னு இல்லடா… உண்மைய சொல்றதுக்கு இப்போதைக்கு எனக்கு தைரியம் இல்லை” என்று ராஜ்மோகன், அனுவின் அப்பா வருத்தத்துடன் கூறினார்.

“உங்க நிலைமை எனக்கு புரியுது பா… ஆனா, அந்த பக்கத்துல இருந்து எல்லாம் சந்தேகமும் வர ஆரம்பிச்சிருச்சு…. அவ்வளவு ஏன் என் கிட்டயே அபிலாஷ் கேட்டாரு…. “உங்க அப்பா கிட்ட ஏதாவது கேட்ட ஹெல்ப் பண்ண முடியுமான்னு” அப்படி இருக்கும் போது இது எப்படிப்பா ரொம்ப நாளைக்கு மறைச்சு வைக்க முடியும்… அதுவும் இல்லாம அவங்களும் உண்மையை தெரிஞ்சக்குறதுக்கு உரிமையானவங்க தானே” என்று அனு கேட்டாள்.

“கண்டிப்பா சொல்லணும் டா அனு மா…. கண்டிப்பா சொல்லிடுவேன் கூட…. என்னோட பதவிய விட்டுக் கொடுக்க கூட நான் தயாராகி தான் அந்த லிவர் டிரான்ஸ்பிளான்ட் ஆப்ரேஷனை நான் பண்ணேன்… எல்லாம் குணமாயிட்டு நல்லா இருக்குறத பார்க்கும் போது எனக்கும் சந்தோஷமா இருக்கு… இதை கண்டிப்பா நானே வந்து சொல்லுறேன் மா, அவங்களா தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி…. ஆனா, என்ன கொஞ்ச நாள் டைம் வேணும்… நானே என்னுடைய மனநிலைய திடப்படுத்திக்கிட்டு அந்த ஊருக்கு வந்து கண்டிப்பா உண்மைய சொல்லிடுவேன்” என்று ராஜ்மோகன் உறுதி அளித்தார்.

மறுநாள் சனந்தா பள்ளிக்கூடத்திற்கு சென்ற பின், சரவணன், விக்ரம் மற்றும் அபிலாஷ் ஆஃபீஸில் பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன மச்சான் சொல்ற??? டிரான்ஸ்பிளான்டேஷனே சனந்தாவுக்கு நடக்கலையா??? நான் நினைச்சதே இப்போ நிஜமாயிருச்சு….. சனா இங்க வந்து நம்ம கிட்ட எல்லாம் பழகும் போது, இங்க அவ செய்யுற விஷயம் எல்லாம் பார்க்கும் போது உண்மையிலேயே அபர்ணா உடல் உறுப்பு கொடுத்ததுல தப்பே இல்லன்னு தோணிச்சு… ஆனா, இப்போ சனாக்கு ட்ரான்ஸ்பிளான்டே நடக்கலன்னா அப்ப யாருக்கு தான் பண்ணி இருக்காங்க??? எனக்கு ஒண்ணுமே புரியலையே!!!” என்று அபிலாஷ் கோபமும் ஆதங்கமும் சேர்ந்து கூறினான்.

“எங்களுக்கும் அப்படித் தான் இருக்கு….. என்னன்னே புரியல இது எல்லாத்துக்கும் மேல நேத்து வண்டி ஓட்டும் போது சனந்தாக்கு திருப்பி தலை வலிக்க ஆரம்பிச்சுது…. சடன்னா பிரேக் போட்டுட்டு என் மேல கை வெச்சா நான் எங்க முன்னாடி சாஞ்சிருவேனோன்னு அவ்வளவு தான்…. ஆனா, அவளுக்கு வேற யாரையோ இதே மாதிரி பண்ணதா ஞாபகமா இருக்குன்னு சொல்லி இருக்கா…. அதுலயும் ஒரு பொண்ணு என்றதுல ரொம்ப உறுதியாக சொல்றா…. ஒரு வேளை அந்த ஆக்சிடென்ட் அப்போ தான் ஏதாவது நடந்திருக்கும் போல இந்த மாதிரி” என்று விக்ரம் கூறினான்.

“சரி அவ கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி மறந்துட்டேன்னு சொன்னத எப்படி டா அவ ஏத்துக்கிட்டா??” என்று சரவணன் கேட்க,

“அது தெரியல… ஆனா, நேத்துல இருந்து இப்படித் தான் கொஞ்சம் அப்செட்டா இருக்கா…. நேத்து காலையில எல்லாம் ரொம்ப ஹேப்பியா நாங்க வெளியில எல்லாம் போனோம் டா… ஆனா, இந்த இன்சிடென்ட் நடந்ததுல இருந்து ஒரு மாதிரி டல் ஆயிட்டா… அவ நிறைய யோசிக்கிறா போல” என்று விக்ரம் கூறவும்,

“பாவமா இருக்கு டா… அவளுக்கும் அவ லைஃப்ல என்ன நடக்குது ஏது நடக்குது என்றது எதுவுமே உண்மை முழுசா அவளுக்கு தெரியாது… அப்போ எவ்ளோ கஷ்டப்படுவா” என்று சரவணன் கூறவும் இருவரும் ஆமோதித்தனர்.

“மச்சான் இதிலிருந்து அவள டைவர்ட் பண்ணி கொண்டு வர வேண்டியது உன்னோட பொறுப்பு…. உன்னால மட்டும் தான் இது முடியும்” என்று அபிலாஷ் கூறவும்,

விக்ரம் அமைதியாகவே இருக்க, சரவணன் விக்ரமின் தோள் மீது கையை வைத்து, “மச்சான் இங்க பாரு இப்ப நடக்குற எல்லாமே நம்ம சேர்ந்து கடந்து வருவோம் சரியா… இப்போ உனக்கு நாங்க ரெண்டு பேரும் இருக்குற மாதிரி அவளுக்கு யார் இருக்கா…. கௌதம் இருந்தாலுமே கூட ஒரு எட்டு தள்ளி தான் இருப்பா… அதனால தான் அபி சொல்றான் நீ அவ கூட இரு முடிஞ்ச அளவுக்கு…. அவளுக்கு இதெல்லாம் ஒன்னும் இல்ல அப்படின்னு தைரியத்த கொடுக்க பாரு அப்ப தான் அவளும் சரியாகுவா” என்று சரவணன் கூறவும்,

“ம்ம்… நான் போய் அவளை பார்த்துட்டு அப்படியே சாப்பிட வீட்டுக்கு வந்திடுறேன்” என்று விக்ரம் கூறி சென்றான்.

சனந்தா காலையில் சென்று குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து அவர்களுக்கு சிறிய ஆக்டிவிட்டியும் கார்த்திக்கின் உதவியுடன் செய்து முடித்தாள். பின் கார்த்திக்கும் வீட்டிற்கு சென்ற பின் சனந்தா பள்ளிக் கூடத்திலேயே அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

“கொஞ்ச நாள் நான் சந்தோஷமா இருந்தா போதுமே அதுக்கு அப்புறம் எனக்கு ஏதோ ஒன்னு ஆகுதே…. கடவுளே என்ன நடக்குது எனக்கு…. வீட்ல உள்ளவங்க ஏதோ ஒரு காரணத்தினால சில விஷயங்களை மறைக்கிறாங்க….. எனக்கு என்னமோ கௌதமும் சில விஷயங்களை மறைக்கிறான்னு தோணுது”….

“அதெல்லாம் போக ஏன் லிவர் டாக்டர பார்க்க சொன்னாங்க…. ஏன் அவர் ஸ்கேன் பண்ணாரு எனக்கு ஒன்னும் புரியல… அதுவும் அபிலாஷ் டாக்டர் என் கிட்ட ஒரு வாட்டி, “உங்களுக்கு லிவர் ஆப்ரேட் பண்ணாங்களா… இல்ல மருந்து எல்லாம் சாப்டீங்களான்னு” கேட்டும் போதும், இல்லன்னு நான் உறுதியா சொன்னேன்… ஆனா இப்ப எனக்கு என்னமோ, எல்லாம் ஏதோ ஒரு இடத்தில கனெக்ட் ஆகுற மாதிரி இருக்கு… அதே மாதிரி கனெக்ட் ஆகாத மாதிரியும் இருக்கு”….

“இது எல்லாதுக்கும் மேல, நான் யாரை கூட்டிட்டு போனேன் வண்டியில…. யார் அந்த பொண்ணு… எனக்கு ஏன் திடீர்னு இதெல்லாம் ஞாபகம் வருது… ஒண்ணும் புரியலையே” என்று சனந்தா யோசித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன பூனைக்குட்டி பலத்த யோசனையோ???” என்று விக்ரம் கூறிக் கொண்டே, அவளுக்கு பக்கத்தில் நெருக்கமாக வந்து அமர்ந்து கொள்ளவும், “ப்ச்… தள்ளி உட்காருங்க யாராவது பார்க்க போறாங்க” என்று சனந்தா சற்று நகரவும், விக்ரம் அவளை இழுத்து தன் தோளுடன் அணைத்து கொண்டு, “யாரும் வர மாட்டாங்க பயப்படாத சரியா…. அப்படியே வந்து பார்த்தாலும் என்ன உனக்கு??” என்று விக்ரம் கேட்டான்.

சனந்தா அவனை முறைத்து பார்க்க, “ப்ச் முறைக்காத டி பூனைக்குட்டி… நேத்துல இருந்து நீ டல்லாவே இருக்க…. என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு எனக்கும் ஒரே கவல… சரி நானும் கொஞ்சம் டைம் கொடுத்தா சரியாயிருவேன்னு பார்த்தேன் பார்த்தேன், நீ சரியாகுற மாதிரி இல்லையே” என்று விக்ரம் கூறவும்,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல பா…. நான் நல்லா தான் இருக்கேன்” என்று சனந்தா கூறி முகத்தை திருப்பிக் கொள்ள விக்ரம் அவளின் தாடை பிடித்து அவன் புறம் திருப்பி, “இங்க பாரு நீ என்ன யோசிக்கிற… உனக்குள்ள என்ன எல்லாம் ஓடுது இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்…. ஆனா அதையே நீ பொழுதுக்கும் யோசிச்சிட்டு இருக்காத…. உனக்கு ஏதோ முக்கியமான விஷயம்னு மட்டும் என்னால புரிஞ்சுக்க முடியுது தான்…. ஆனா, அதை நீ கடந்து வரணும், தைரியமா இரு, அப்படி இப்படின்னு நான் சொல்ல மாட்டேன்…. ஆனா, அதையே யோசிச்சு இப்ப என்ன நடக்குதுன்றத நீ கான்சன்ட்ரேட்டே பண்ண மாட்டேங்கற சனந்தா” என்று விக்ரம் வருத்தத்துடன் கூறினான்.

“ஆங்… நேத்து ரிசப்ஷன்லயும் அப்படித் தான் இருந்த… உன்னோட ஃபிரெண்ட்ஸ் சீனியர்ஸ் எல்லாம் வந்து இருந்தாலும் கூட ரொம்ப டல்லாவே தான் இருந்த பூனைக் குட்டி அப்படி இருக்காத டி” என்று விக்ரம் இன்னும் அவளை தான் தோளுடன் அணைத்துக் கொண்டு பேசவும், அவனின் பேச்சிலும், அவன் பேசும் போது அவனின் கண்களும் சேர்ந்து பேசியதை பார்க்க, சனந்தா புன்னகைத்தாள்.

“அதே மாதிரி உனக்கு எப்பயாவது ஏதாவது சோகமா இருக்கு, இல்ல கஷ்டமா இருக்கு, இல்ல குழப்பமா இருக்கு, இல்ல ஒன்னுமே தோணலைன்னா கூட சரி இப்படி என் மேல சாஞ்சுக்கோ” என்று விக்ரம் அவளின் தலையை பிடித்து தோள் மீது சாய வைத்துக் கொண்டு, அவளின் கன்னத்தின் மீது லேசாக தட்டி கொடுத்தான்.

அந்த அரவணைப்பு சனந்தாவுக்கு மிகவும் தேவைப்பட்டதால் சனந்தாவும் சற்று நேரம் அமைதியாக கண்களை மூடி விக்ரமின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். பின், சனந்தா தன்னை சுதாரித்துக் கொண்டு அவன் மீது இருந்து எழுந்து, “வாங்க வீட்டுக்கு போலாம்…. யாராவது பார்த்தா நல்லா இருக்காது” என்று சனந்தா கூறவும், ம்ம் என்று விக்ரம் ஆமோதித்து, “சரி வா பசிக்குது எனக்கு…. உனக்காக தான் இங்க வந்தேன்” என்று கூறி அவளுடன் உற்சாகமாக பேசிக் கொண்டே வீட்டிற்கு நடந்த சென்றனர்.

“இவ்வளவு தான் வாழ்க்கையா… என்ன கஷ்டம் என்ன குழப்பம் எது இருந்தாலும் இவர் வந்து பேசினா இல்ல இவர் கூட இருந்தா எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு அந்த நொடி நம்மதியா இருக்கணும்னு தோணுது…. அன்னிக்கு நைட்டும் அவருக்கும் அப்படித் தான் தோணிச்சுன்னு சொன்னாரு…. அப்ப எங்க ரெண்டு பேருக்கும் நாங்க அவ்வளவு முக்கியமான ஆட்களா இருக்கோம்ல” என்று சனந்தா மனதில் நினைத்துக் கொண்டே விக்ரமின் வீட்டிற்கு சென்றனர்.

அனைவரும் ஒன்றாக உணவருந்தி விட்டு சனந்தா ஊரில் இருந்து வாங்கிக் கொண்டு வந்ததையும் மற்றும் சனந்தாவின் பெற்றோர்கள் கொடுத்த அனுப்பியதை வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் கொடுத்தாள்.

“நாங்க உங்களுக்கு கொடுத்த அனுப்புறத விட நீ எடுத்துட்டு வரர்து தான் ஜாஸ்தியா இருக்கு சனா” என்று ஸ்ரீனிவாசன் கூற, “அப்படி எல்லாம் இல்ல அங்கிள்…. பிரகாஷ் அங்கிள் எப்பயும் கொடுக்குறத அவர் கொடுத்து விடுறாரு…. நானும் சரி பாசங்களுக்காக வாங்கிட்டு வந்து இருக்கேன் அது போக அம்மா அப்பா உங்களுக்கு கொடுத்து விட்டது அவ்வளவு தான்” என்று சனந்தா கூறினாள்.

ஹே கவிதா வா வா!! என்று வள்ளி அழைக்கவும் கவிதாவும் புன்னகையுடன் உள்ளே வந்து சுற்றியும் ஒரு எதிர்பார்ப்புடன் பார்க்க, அங்கே கௌதம் இல்லை என்று அவள் உணரவும் அவளின் முகத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. அதை சனந்தா கவனித்து, “கவிதா உங்களுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்… அது என் ரூம்ல இருக்கு வாங்க நம்ம போய் எடுத்துட்டு வந்துருவோம்” என்று அழைக்கவும் கவிதா அவளுடன் சென்றாள்.

என்ன தான் கவிதா அவளின் தினசரி வேலைகளை பார்த்துக் கொண்டே இருந்தாலும் அவர்களுடைய கவனம் முழுவதும் இந்நேரத்துக்கு கௌதம் வந்து அவளை சந்தித்து இருக்க வேண்டும் என்று தான் இருந்தது.

“என்னாச்சு அவருக்கு? நேத்து நைட் வந்துட்டு இருப்பாரே…. என்னை பார்க்க வந்து இருக்கனுமே… இவ்வளவு நேரம் ஆகுது இன்னும் வரவே இல்லையே… ஒரு வேல அப்பா ஏதாவது சொல்லி இருப்பாரா??” என்று பெரும் யோசனையுடன் அவளின் கைப்பையை அள்ளிக் கொண்டிருந்தாள்.

மதியம் உணவு அருந்திவிட்டு முத்து உறங்கிய பின் விக்ரமின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விக்ரமின் வீட்டிற்கு வந்தாள் கவிதா. நடந்து வரும் வழி எல்லாம் ஏனோ அவளுடைய கவனம் சிந்தனை முழுவதும் கௌதம் ஏன் வரவில்லை என்ன ஆயிற்று என்று இதுவே தான் இருந்தது.


கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல.



எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 79
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.