Chapter 80

Bhavani Varun

Member
Jan 23, 2025
83
0
6
சனந்தா, கௌதம் கொடுத்த ஒரு சிறிய பெட்டியை கவிதாவிடம் கொடுத்து, “இது கௌதம் கொடுத்து விட்டான்…. அவன் இப்போதைக்கு வரல எங்க கூட…. ஒரு முக்கியமான வேலையில மாட்டிக்கிட்டு இருக்கான்…. முடிஞ்சதும் வரேன்னு சொன்னான்… அப்புறம் இதுல ஒரு லெட்டரும் வெச்சிருக்கான்னு சொன்னான்” என்று சனந்தா கூறவும், கவிதாவின் ஏமாற்றம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

மேலும் கவிதாவின் கண்களில் லேசாக கண்ணீர் கசிந்தது. அதை உணர்ந்த சனந்தா அவளை அணைத்துக் கொண்டு, கவிதாவின் முதுகை வருடி கொடுத்து, “அவன் அடுத்த வாட்டி உங்களை வந்து பார்க்கும் போது புரியும் கவிதா…. உங்களுக்காக அவ்வளவு யோசிச்சு பண்ணிட்டு இருக்கான்…. அப்போ இந்த அழுக எல்லாம் இருக்காது…. உண்மையிலேயே அவ்வளவு சந்தோஷப்படுவீங்க கவிதா…. என்னை நம்புங்க” என்று சனந்தா கூறவும், ம்ம்… என்று மட்டும் கூறினாள் கவிதா.

கவிதா தன்னை சுதாரித்து, அவளை விடுவித்துக் கொண்டு, “ரொம்ப தேங்க்ஸ் சனா என்னை புரிஞ்சுகிட்டு என்னை தனியா கூட்டிட்டு வந்து என்கிட்ட பேசி சமாதானம் பண்ணி….. அவர் கொடுத்தத எல்லார் முன்னாடியும் கூட கொடுத்து இருக்கலாம் ஆனா, அதெல்லாம் பண்ணாம தனியா அழைச்சிட்டு வந்து கொடுத்து, அவர் வரலைங்கறதையும் எடுத்து சொல்லி எனக்கு புரிய வெச்சதுக்கு ரொம்ப நன்றி” என்ற கவிதா மனதார கூறினாள்.

“அதெல்லாம் ஒன்னும் பரவால்ல நீங்க அழாதீங்க…. நீங்க அழுதீங்கன்னு தெரிஞ்சா நான் தான் அழ வெச்சேன்னு அந்த குரங்கு என்னை திட்டினாலும் திட்டும்” என்ற சனந்தா கூறவும், கவிதா சிரித்து விட்டாள். “ம்ம்… அப்போ உங்களுக்கும் கௌதம்…..” என்று சனந்தா கேள்வியை பாதியுடன் நிறுத்தினாள்.

கவிதா அவளை பார்த்து, “எனக்கு அவர புடிச்சிருக்கு சனா…. இவ்வளவு வருஷம் எங்க அப்பா சொன்னதெல்லாம் வெச்சு எனக்கு விக்ரம புடிச்சிருக்குன்னு நானே என்னை ஏமாத்திக்கிட்டு இருந்து இருக்கேன்…. இவர் கிட்ட பேசி பழகி இவர் மேல ஏற்பட்ட உணர்வ புரிஞ்சிகிட்ட அப்புறம் தான் தெரிஞ்சது சனா, இந்த உணர்வும் விக்ரம் மேல இருக்குற உணர்வும் ஒன்னு இல்லன்னு”….

“எனக்கு விக்ரம் மேல எப்பவுமே ஒரு மரியாதை கலந்த ஒரு நட்பு இருந்திருக்கு…. அதுலயும் அபர்ணா இறந்தபோ ரொம்ப சோகமா இருந்த நிலையில கூட நான் போய் விக்ரம் கிட்ட பேசினப்போ கூட எப்பவும் போல தான் பழகினான் என்கிட்ட…. அப்புறம் நீங்க வந்ததுக்கப்புறம் நான் ரொம்ப தாழ்வு மனப்பான்மையோட இருந்தேன், அதனால நான் நிறைய விஷயம் பண்ணேன் அது உங்களை காயப்படுத்தி இருக்கும் அதுக்கு ரொம்ப சாரி…. இத எல்லாத்தையும் கடந்து வர வெச்சது அவர் மட்டும் தான்” என்று கவிதா உற்சாகத்துடன் கூறினாள்.

“தெரியுது தெரியுது உங்க மூஞ்சிலேயே நல்லா தெரியுது…. சாரி எல்லாம் வேண்டாம் உங்களுடைய நிலைமைய என்னால புரிஞ்சுக்க முடியுது…. ஆங்… கௌதம் வந்துருவான் கண்டிப்பா வந்துருவான்…. வரும் போது உண்மையிலேயே உங்களுக்கு ரொம்ப ரொம்ப பெரிய சர்ப்ரைஸ் கொண்டு வருவான்…. ம்ம்…. அப்புறம் கௌதம் கிட்ட சொல்லிட்டீங்களா உங்களுக்கு அவனை பிடிக்கும்னு???” என்று சனந்தா கேட்கவும், இல்லை என்பது போல் தலையை அசைத்தாள் கவிதா.

“எப்ப சொல்றதா இருக்கீங்க??” என்று சனந்தா கேட்க, “இப்போ அவர் வந்திருப்பாருல இப்ப சொல்லலாம்னு தான் நான் நினைச்சுட்டு இருந்தேன் ஏன்னா இந்த ரெண்டு நாள் அவர் இல்லாதத நான் எவ்ளோ வெறுமையா உணர்ந்தேன்னு எனக்கு தான் தெரியும்… அதெல்லாம் அவர் கிட்ட சொல்லணும்னு நான் ரொம்ப ஆசையா காத்துட்டு இருந்தேன்…. ஆனா, அவர் வரலைன்னு தெரிஞ்சதும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கவிதா வருத்தத்துடன் கூறினாள்.

“நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க கவிதா… எப்படி இவ்வளவு தைரியமா சொல்லணும்னு முடிவு எடுத்தீங்க??” என்று சனந்தா கேட்கவும், “அதை நான் சொல்லாம எனக்கு இருக்கிற அந்த வாய்ப்பையும் நான் பறி கொடுத்துட்டு பின்னால கஷ்டப்படுவேனோன்னு யோசனை வந்துது எனக்கு… அதனால அவர் கிட்ட எப்படியும் சொல்லிடனும்னு எனக்கு தோணுச்சு” என்று கவிதா கூறினாள்.

“ம்ம்… உங்க அப்பா….” என்று சனந்தா கேட்க, “அப்பாவுக்கு நான் சந்தோஷமாவும் பாதுகாப்பாவும் இருக்கனும்னு தான் நினைப்பாரு…. அந்த விஷயத்துல நான் அவர(கௌதம்) ரொம்பவே நம்புறேன்” என்று கவிதா கூறவும், சனந்தாவும் எதையோ உணர்ந்தவள் போல் தலையை மட்டும் அசைத்தாள்.

“ஆன்… இதுல லெட்டர் இருக்குன்னு சொன்னான்” என்று சனந்தா கூறவும், “லெட்டரா…. அது..” என்று கவிதா தயக்கமாக கேட்க, “தமிழ்ல தான் எழுதி இருக்கான்… உங்கள பத்தி யோசிக்காம இருப்பானா அவன்… அப்புறம் ஃபோன் நம்பரும் எழுதி இருக்கேன்னு சொன்னான்…. இவ்வளவு நாள் இருந்திட்டு ஒரு ஃபோன் நம்பர் கூட வாங்காம இருந்து இருக்கான் பாருங்களேன்” என்று சனந்தா கூறவும்,

“ஃபோன் நம்பர் வாங்காம இல்ல… அவர் கேட்டப்போ நான் முடியாதுன்னு சொன்னேன்… அதுக்கப்புறம் அவர் சொன்னாரு, “எப்போ உனக்கு கொடுக்கணும்னு தோணுதோ அப்ப நீயே எனக்கு என்கிட்ட ஃபோன்ல பேசு” அப்படின்னு சொல்லி இருந்தாரு அதனால தான் போல” என்று கவிதா கூறினாள்.

“அது சரி அவன் தெளிவா தான் இருக்கான்… நான் தான் மண்டு மாதிரி யோசிக்கிறான் போல” என்று சனந்தா அவளையே கடிந்து கொள்ள, கவிதா புன்னகைத்தாள். கவிதாவுக்கு கௌதம் இல்லாத வெறுமை அவளை சற்று வாடிய முகத்தோடு தான் காண செய்தது. இரவு அனைவருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு அவளுடைய வீட்டிற்கு சென்று முதலில் டப்பாவை பிரித்து அதில் உள்ள லெட்டரை படித்தாள்.

“முதல்ல ரொம்ப சாரி சாரி சாரி…. என்னால உன்கிட்ட சொல்ல முடியாம போனதுக்கு, நான் எப்படியும் வந்துருவேன்னு ரொம்ப நம்பிக்கிட்டு இருந்தேன்…. நான் ரொம்ப முக்கியமான வேலையில மாட்டிக்கிட்டேன் அதான் என்னால உன்கிட்ட சொல்ல முடியல…. ரொம்ப சாரி”….

“நல்லா சாப்பிடு சந்தோஷமா இரு… வேலையிலேயே ரொம்ப நேரம் மூழ்கி இருக்காத… அப்புறம் முக்கியமா அப்பாவ நினைச்சு பயப்படாதே எல்லாத்தையும் நான் கூடிய சீக்கிரம் சரி பண்றேன் என்னை நம்பு…. அப்புறம் என் நம்பர் உன்கிட்ட நான் அப்பவே கொடுத்தேன்.. ஆனா, ஒரு வேலை நீ அதை டெலிட் பண்ணி இருந்தா…. அதனால இப்ப திருப்பி இந்த லெட்டர் கீழே நம்பர் எழுதி இருக்கேன் உனக்கு தோணுச்சுன்னா எனக்கு கால் பண்ணு இல்லனா ஒரு மெசேஜ் அச்சும் பண்ணு”….

“ம்ம்ம்… எனக்கு இப்ப சொல்லணும்னு தோணுது… ஆனா, சொன்னா நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியல…. நான் உன்ன ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் கவி” என்று கௌதம் எழுதிய மடலை படித்ததும் கவிதாவுக்கு ஆனந்தம் ஒரு பக்கம் இருந்தது…. கடைசியில் “உன்ன மிஸ் பண்றேன் கவி” என்று கூறியதில் கண் கலங்கியும் விட்டாள் கவிதா.

முதலில் லெட்டரை பத்திரப்படுத்தி பின் அவன் அனுப்பிய வளையலை அவள் கையில் போட்டு பார்த்து அழகு பார்த்துக் விட்டு, பின் அதையும் எடுத்து வைத்து, கௌதமுக்கு, “நான் கவிதா நாளைக்கு காலைல ஃபோன் பேசலாம் இப்போ அப்பா இருக்காங்க” என்று தமிழில் குறுஞ்செய்தியை தட்டிவிட்டு உற்சாகத்துடன் உறங்கிப் போனாள்.

“கவிதா இவ்ளோ தைரியமான ஆளா இருக்காங்க…. நானும் தான் இருக்கேனே ச்சே…. அவங்க அப்பா எல்லாம் எவ்ளோ ஸ்டிரிக்ட்னு கேள்விப்பட்டு இருக்கேன்…. அவருக்கே அவங்க பயப்படல… அதுலயும் நான் கேட்ட உடனே முகத்துக்கு நேரா ஒத்துக்கிட்டாங்க கௌதம பிடிச்சிருக்குன்னு… இந்த தைரியம் தான் லவ்வுக்கு ரொம்ப முக்கியம்” என்று சனந்தா மனதில் நினைத்துக் கொண்டிருக்க, அவளது கைபேசிக்கு விக்ரம் மாடிக்கு வருமாறு குறுஞ்செய்தியை அனுப்பினான்.

சனந்தா மாடிக்கு செல்ல விக்ரம் நின்று கொண்டிருக்கவும் அவன் அருகில் சென்று, “என்ன இந்த நேரத்துல மெசேஜ் பண்ணி இருக்கீங்க?? இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு மெசேஜ் பண்ணி இருந்தா நான் தூங்கவே தூங்கிட்டு இருப்பேன் போல” என்று சனந்தா கூறவும், “அதனால தான் அவசர அவசரமா மெசேஜ் பண்ணேன்” என்று விக்ரம் கூறினான்.

“அப்படி என்ன அவசரம் என்ன பேசணும் உங்களுக்கு??” என்று சனந்தா கேட்கவும், “என்ன பேசணுமாஆஆ?? நிறைஐஐஐய பேசணும்???” என்று விக்ரம் அவளை தன் தோளுடன் அணைத்துக் கொள்ள, சனந்தா சினுங்கி, “விடுங்க யாராவது பார்த்தாங்கன்னா…” என்று கூறவும், “இப்ப யாரு வருவா, அதுவும் இந்த நேரத்துல… அப்படி உனக்கு ரொம்ப யோசனையா இருந்துச்சுன்னா கீழே உக்காந்துக்கலாம் அவ்வளவு தானே… யாரும் வர மாட்டாங்க” என்ற விக்ரம் கூற, சரி என்று இருவரும் கீழே அமர்ந்து கொண்டனர்.

இருவரும் கீழே அமர்ந்து கொள்ளவும், விக்ரமின் பிடி மட்டும் இறுக்கமாகவே இருந்தது. “பூனை குட்டி….” என்று மெல்லிய குரலில் விக்ரம் அழைக்கவும், “உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” என்று சனந்தா கூறினாள்.

“இப்ப தான் சொன்ன அஞ்சு நிமிஷத்துக்குள்ள தூங்கியிருப்பேன்னு…. இப்ப என்னடான்னா பேசணும்னு சொல்ற??” என்று விக்ரம் குறும்பாக கேட்கவும், “தெரியல இப்போ உங்க கூட உங்க பக்கத்துல இவ்ளோ நெருக்கமா உட்கார்ந்திருக்கும் போது தான் எனக்கும் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்னு தோணுது” என்று சனந்தா கூறவும், விக்ரம் ஆர்வத்துடன் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சனந்தாவின் தோளில் விக்ரம் கை போட்டு இருந்ததை எடுத்து அவனுடைய விரல்களுடன் இவள் விரல்களை கோர்த்து மிகவும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு விக்ரமை பார்த்துக் கொண்டே,

“எனக்கு உங்கள முதல்ல பார்த்த அப்பவே உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி உணர்வு இருந்துது…. அதுலயும் பழகி இருக்குற மாதிரி ஒரு உணர்வு எனக்கு இருந்துது…. எனக்கு நிறைய ஆசை இருக்கு, இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ஏனோ தெரியல உங்க பக்கமும் ஒரு தெளிவில்ல என் பக்கமும் குழப்பங்கள் நிறைய இருக்கு… அது போக தைரியமும் ரொம்ப கம்மியா தான் இருக்குற மாதிரி நான் உணர்ந்து இருக்கேன்… ஆனா, இன்னிக்கு என்னன்னு தெரியல உங்க கிட்ட எல்லாத்தையும் பேசணும்னு தோணுச்சு” என்று சனந்தா கூறி, சில நொடி அமைதியாகி விட்டு பின்பு விக்ரமை பார்த்துக் கொண்டே, “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் விக்ரம் ஐ அம் இன் லவ் வித் யூ” என்று சனந்தா கூறினாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல


எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 80
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.