“எங்க லவ்ல எந்த குழப்பமும் இல்லாம எல்லாம் சுமூகமா நடக்கணும்னாலும் இப்ப இருக்குற குழப்பம் எல்லாம் தீரனும் டா…. அதனால நீ முதல்ல சொல்லு என்ன விஷயம்னு” என்று விக்ரம் கூறினான்.
“ம்ம் சரி டா… நீ சொன்னதுக்கு அப்புறமா காளி அவரோட குரூப்ல நமக்கு ஏற்கனவே ஒரு ஆள தெரியும் ஞாபகம் இருக்குல உனக்கு….. காளி இங்க வந்து முதல்ல பிரச்சனை பண்ணப்போ கூட அந்த பையனோட ஹெல்ப்ல தான் நம்ம முன்கூட்டியே எச்சரிக்கையா இருந்தோம்” என்று சரவணன் கூறவும், “ஆன்… ஆமா ஞாபகம் இருக்கு… அந்த பையன் ஹெல்ப் பண்ணதுனால தான் நம்ம இங்க உஷாரா எல்லாமே தயாரா இருந்தோம் அவர் வருவாருன்னு” என்று விக்ரம் கூறினான்.
“ஆமா, நீ விவரம் எல்லாம் சொன்னதுமே அந்த பையன் கிட்ட நான் ஒரு எச்சரிக்கைகாக போட்டு வெச்சேன் விஷயத்த… கொஞ்சம் ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்லுன்னு அந்த பையன் கிட்ட தான் சொன்னேன்… அவன் தான் காலையில ஃபோன் பண்ணான்”…
“நேத்து நைட் அவர் கூட இருக்குற அடியாள அடிச்சிட்டாராம் அதுவும் அவர் கிட்ட தகவல் சொல்லாம இருந்ததுக்கு அடிச்சாராம், என்ன தகவல் தெரியுமா???, நீங்க விசாரிக்க போனீங்கல, நீயும் பிரகாஷ் சாரும் சனாவோட அப்பாவும், அது எப்படியோ வேலுமணி கண்டு பிடிச்சு இருக்காரு, அங்க இருந்து காளி கிட்ட சொன்னதும், எந்த ஒரு சின்ன தகவலா இருந்தாலும் அவருக்கு தெரிய படுத்தலன்னு சொல்லி அடியாள அடிச்சி இருக்காரு டா… இப்ப இது விஷயம் இல்ல, அதை விட முக்கியமான விஷயம் என்னன்னா அந்த அடியாளுக்கு வந்த சந்தேகம் தான்” என்று சரவணன் கூறினான்.
“அப்படி என்ன டா சந்தேகம்” என்று அபிலாஷ் ஆர்வத்துடன் கேட்க, “காளி அண்ணா நிறைய வேலை பார்த்து இருக்காரு… அவ்வளவு ஏன் அவரே கூட அவர் கையால வெட்டி எல்லாம் கூட கொலை பண்ணிருக்காரு…. அப்ப எல்லாம் யோசிக்காத, பயப்படாத அவர், அபர்ணாவ பத்தியும் இந்த ஆக்சிடென்ட் பத்தியும் மட்டும் ஏன் யோசிக்கணும்… அதுவும் லாரியோட நம்பர் பிளேட்டும் பொய்.. எல்லாமே செட் பண்ணது தான்… அதனால அதிலிருந்து எப்படி தப்பிக்கணும்ன்றது கூட தெரிஞ்சும் ஏன் இவரு இந்த விஷயத்துல இன்னும் இப்படி பயப்பட்டுட்டு இருக்காருன்றது” தான் அந்த அடியாளோட சந்தேகம்” என்று சரவணன் கூறி முடித்தான்.
“அப்படின்னா அப்ப அவருக்கு எதிரா ஏதாவது எவிடன்ஸ் இந்த பக்கம் இருக்கும்னு நினைக்கிறாரோ??” என்று விக்ரம் கூறவும், “அதான் சனா இருக்கால அவ தானே எவிடென்ஸ்” என்று அபிலாஷ் கூறவும், “சனா எவிடன்ஸ் தான்… ஆனா, சனா எல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்ல… எவ்வளவோ பண்றாரு அவளையும் தட்டி தூக்கிட்டு போயிட்டே இருக்கலாம்” என்று விக்ரம் கூறவும்,
“அதுவும் சரி தான் விக்கி நீ சொல்றது….. அப்புறம் வேற என்ன இருக்கும்??” என்று குழப்பத்துடன் அபிலாஷ் கேட்க, “ஒரு வேள அப்பு கிட்ட ஏதாவது இருந்திருக்குமோ??” என்று சரவணன் கேட்டான்.
“எனக்கு இந்த யோசனை நம்ம அப்புவ பத்தி தெரிஞ்சுக்கிட்டு வந்தோம்ல அவ காலேஜுக்கு போயிட்டு அப்பவே இருந்துது… அப்பவே அவளுடைய திங்க்ஸ் எல்லாமே அலசி பார்த்துட்டேன் எதுவுமே இல்லை சந்தேக படுற மாதிரி…. வழக்கமா ஏதாவது எழுதி வைப்பா ஒரு நோட்ல அந்த நோட்டும் பார்த்துட்டேன் ஒன்னுமே இல்ல” என்று விக்ரம் கூறினான்.
“அதே மாதிரி அப்புவோட ஃபோன் கூட இன்னும் நமக்கு கிடைக்கவே இல்ல விக்ரம்” என்று அபிலாஷ் கூற, “ஆமாண்டா அது எவ்வளவு நாளா நானும் ரிக்வெஸ்ட் பண்ணிட்டே இருக்குறது…. ரிமைண்டரும் பண்ணிட்டு தான் இருக்கேன்… ஆனா, அங்க இல்லவே இல்லை கிடைச்சது ஒரே ஒரு ஃபோன் அதுவும் கூட இருந்த இன்னொரு ஆளோடது தான்னு சொன்னாங்க” என்று விக்ரம் கூறினான்.
“சரி நான் எதுக்கும் அந்த பையன் கிட்ட இந்த விவரத்தை சொல்லி வெக்கிறேன்… ஏதாவது தகவல் தெரிஞ்சா நமக்கு சொல்லுவான்” என்று சரவணன் கூறினான். இப்படி மூவரும் பேசிக் கொண்டிருந்து பிறகு அவர் அவர்களின் வேலையை காண சென்றனர்.
அன்று அனு வந்து அவளின் பரிசோதனைகளை முடித்து சிறிது நேரம் அமர்ந்திருக்கவும், “நான் உங்க கிட்ட டீடெயில்ஸ் கேட்டேனே” என்று அபிலாஷ் தயக்கத்துடன் கேட்க,
“நானும் நீங்க கேட்டத அப்பா கிட்ட கேட்டு இருக்கேன்… அதோட விவரம் கண்டிப்பா எடுத்து தரேன்னு சொன்னாரு…. அதே மாதிரி இப்படி தெளிவில்லாம விவரங்கள வேற யார் கிட்டயும் கேட்க வேணாம்னு சொன்னாரு…. அவரு இதை கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்காரு” என்று அனு கூறவும்,
“நிஜமா தான் சொல்றீங்களா??? கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாரா??” என்று அபிலாஷ் சந்தேகத்துடன் கேட்க, “கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்காரு நீங்க கவலைப்படாதீங்க” என்று அனு உறுதி அளித்தாள்.
கவிதாவின் கைபேசி ஒலிக்கவும் அவள் யாருமில்லாத இடத்திற்கு சென்று அட்டென்ட் செய்ய, ஹலோ!! என்று கௌதம் பேசவும், ஹ… ஹலோ!! என்று கவிதா தயக்கத்துடன் கூறினாள்.
“ஹப்பா இப்பவாவது என் ஃபோனுக்கு மெசேஜ் பண்ணனும்னு தோணுச்சே உனக்கு” என்று கௌதம் கேலியாக கூற, “ஹய்யோ அப்படி இல்ல… நீங்க நேர்ல வந்தா பேசணும்னு தான் இருந்தேன்…. அதுவுமில்லாம இந்த ரெண்டு நாள்லயும் பேசணும்னு ஆசையா இருந்துது… ஆனா, உங்க நம்பர் எப்படின்னே தெரியல போயிருச்சு…. நான் டெலிட் பண்ணல… அது எப்படின்னு எனக்கு தெரியல…. அதே மாதிரி சரவணன் அண்ணன் கிட்டயும் உங்க நம்பரை கேட்க எனக்கு ஒரு மாதிரி தயக்கமா இருந்துது…. அடுத்த நாள் விக்ரமும் இல்ல விக்ரம் இருந்திருந்தா கூட உங்க நம்பர கேட்டு இருப்பேன்” என்று கவிதா காரணங்களை அடுக்கினாள்.
அவளுக்கும் அவனிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருப்பதை கவிதா கூறவும், கௌதமுக்கு மிகவும் மகிழ்ச்சி. “சரி சரி இப்பவாவது பேசுறல எனக்கு அதுவே சந்தோஷம் தான் கவி” என்று கௌதம் கூறினான்.
“நீங்க ஏதோ முக்கியமான வேலையா வரலன்னு சொன்னாங்க…” என்று கவிதா கூறவும், “ஆமா ரொம்ப முக்கியமான வேலை… ஆனா முடிஞ்சிரும்னு நினைக்கிறேன், ஒரு ரெண்டு மூணு நாள்ல முடிஞ்சிருச்சுன்னா வந்துருவேன்” என்று கௌதம் கூறவும், “ரெண்டு மூணு நாள் ஆகுமா??” என்று சோகமான குரலில் கவிதா கேட்கவும், கௌதம் ரெக்கை கட்டி பறப்பது போல் உணர்ந்தான், தன்னை காண அவளும் ஏக்கத்துடன் இருக்கிறாள் என்பதை உணர்ந்து.
பின்பு கௌதம் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு, “நானும் உன்ன ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் கவி… டெய்லி உன்கூட நடந்து பேசிட்டே போறத மிஸ் பண்ணுறேன்… நம்ம ஆத்து கிட்ட தண்ணீல விளையாடுறத மிஸ் பண்ணுறேன்…. உன்னோட சமையல மிஸ் பண்ணுறேன்… ஆக மொத்தம் உன்னையே முழுசா மிஸ் பண்ணுறேன் கவி” என்று கௌதம் கூறவும், கவிதா வெட்கத்துடன், “ம்ம்… ஆமா எனக்கும் அப்படித் தான் இருக்குங்க” என்று கூறினாள்.
“கூடிய சீக்கிரம் வரேன் மா…. எனக்கு உன்ன பார்க்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு கவி… அதுவும் நீ எனக்காக காத்துட்டு இருக்கேன்னு நினைச்சாலே எனக்கு இன்னும் சந்தோஷமாவும் இருக்கு ரொம்ப ரொம்ப ஆசையாவும் இருக்கு” என்று கௌதம் கூறவும், “எனக்கும் அப்படித் தான் இருக்கு” என்று கவிதா கூறினாள். இப்படி இருவரும் சிறிது நேரம் அவர்களின் காதலை பரிமாறிக் கொண்டு ஃபோனை வைத்தனர்.
சனந்தாவும் பாட்டியும் அவ்வழியாக வரவும், கவிதா ஃபோன் பேசி முடித்து அவர்களை பார்த்ததும் புன்னகையுடன், “பாட்டி நீங்க சொல்லும் போது நான் நம்பல ஆனா இப்போ நம்புறேன் பாட்டி உங்கள” என்று கவிதா இன்முகத்துடன் கூற, பாட்டி புன்னகையுடன், “நீ கண்டிப்பா ரொம்ப சந்தோஷமா இருப்ப… உன்னோட கனவுகள் எல்லாம் நினைவாகும்” என்று பாட்டி வாழ்த்தவும், கவிதா பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு, இருவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு சென்றாள்.
“இப்ப தான் கவிதா ரொம்ப சந்தோஷமா இருக்காங்கல பாட்டி” என்று சனந்தா கூறவும், “அதுக்கு முன்னாடி பாவம் ரொம்ப குழப்பித்துல தான் இருப்பா… எப்படியோ கவிதாவோட அப்பாவும் என் கிட்ட கொஞ்ச நாளுக்கு முன்னாடி பேசிட்டு போனாரு… அதனால அவளுக்கு இனிமே எந்த தடையும் இல்லாம அவ விருப்பப்பட்ட வாழ்கையை அமைச்சிக்க போறா” என்று பாட்டி கூறவும், “அப்படியா… பரவால்லையே… அவங்க அப்பாவும் இவ்வளவு சீக்கிரம் ஏத்துப்பாருன்னு நினைக்கல” என்று சனந்தா கூறினாள்.
“அது அப்படி தான் சனா, பெத்தவங்க புள்ளைங்களுக்கு இதான் சரியா இருக்கும்னு நம்புவாங்க… ஆனா, புள்ள அத விட இன்னோன்னுல சந்தோஷமா இருக்குன்னு தெரிஞ்ச அப்புறம் புள்ளையோட சந்தோஷம் தான் முக்கியம்னு இறங்கி வருவாங்க… அப்படி தான் அவரும் வந்தாரு… முக்கியமா கவிதாவோட முகத்துல பார்த்த சந்தோஷத்துனால தான் என்கிட்ட பேசவே வந்தாரு…. நானும் முதல்ல இருந்து சொன்னது தான்… அவ இங்க கிராமத்துல இருக்க மாட்டா… கண்டிப்பா அவளுக்கு பிடிச்சவங்களோட தான் வெளியே போவான்னு சொன்னேன்… அவரும் இந்த வாட்டி தான் முழு மனசோட கேட்டுட்டு போனாரு” என்று பாட்டி கூறினார்.
“கண்டிப்பா கௌதம் ரொம்ப நல்லா பார்த்துப்பான் பாட்டி… ம்ம் அப்புறம்… எனக்கும் ஏதாச்சும் சொல்லுங்களேன்” என்று சனந்தா ஆர்வமாக கேட்க, “உனக்கு தான் வந்த முதல் நாளே சொன்னேனே… எங்க ஊர் தேவதைய இழந்து வாடி இருந்த போது தான் நீ வந்த எங்கள காக்குறதுக்கு” என்று பாட்டி கூறவும்,
“ப்ச்… அதில்ல பாட்டி… நான் இங்க வந்து வாழ்வேனா??” என்று சனந்தா கேட்க, “முதல்ல உனக்கு இருக்குற பிரச்சனை எல்லாம் சரி பண்ணு… தானா பதில் கிடைக்கும்…. முக்கியமா நீ சரியான நேரத்துல அதுக்கு முயற்சி பண்ணு… எல்லாம் நீ நினைச்ச மாதிரியே நடக்கும்” என்று பாட்டி கூறவும், “இதுக்கு நான் கேட்காமலே இருந்து இருப்பேன்” என்று சனந்தா சலித்துக் கொள்ள, “வந்த வேலையை பார்ப்போம் வா” என்று பாட்டி கூறி இருவரும் சென்றனர்.
கௌதமும் கவிதாவும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஃபோனில் அவர்களின் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். மேலும் சனந்தாவும் விக்ரமும் அவ்வப்போது பேசிக் கொள்வது இருவரும் ஒன்றாக கோயிலுக்கு செல்வது என அவர்களின் காதலையும் வளர்த்துக் கொண்டிருந்தனர். இப்படியே அழகாக சில நாட்கள் அனைவருக்கும் கழிந்தது.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
“ம்ம் சரி டா… நீ சொன்னதுக்கு அப்புறமா காளி அவரோட குரூப்ல நமக்கு ஏற்கனவே ஒரு ஆள தெரியும் ஞாபகம் இருக்குல உனக்கு….. காளி இங்க வந்து முதல்ல பிரச்சனை பண்ணப்போ கூட அந்த பையனோட ஹெல்ப்ல தான் நம்ம முன்கூட்டியே எச்சரிக்கையா இருந்தோம்” என்று சரவணன் கூறவும், “ஆன்… ஆமா ஞாபகம் இருக்கு… அந்த பையன் ஹெல்ப் பண்ணதுனால தான் நம்ம இங்க உஷாரா எல்லாமே தயாரா இருந்தோம் அவர் வருவாருன்னு” என்று விக்ரம் கூறினான்.
“ஆமா, நீ விவரம் எல்லாம் சொன்னதுமே அந்த பையன் கிட்ட நான் ஒரு எச்சரிக்கைகாக போட்டு வெச்சேன் விஷயத்த… கொஞ்சம் ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்லுன்னு அந்த பையன் கிட்ட தான் சொன்னேன்… அவன் தான் காலையில ஃபோன் பண்ணான்”…
“நேத்து நைட் அவர் கூட இருக்குற அடியாள அடிச்சிட்டாராம் அதுவும் அவர் கிட்ட தகவல் சொல்லாம இருந்ததுக்கு அடிச்சாராம், என்ன தகவல் தெரியுமா???, நீங்க விசாரிக்க போனீங்கல, நீயும் பிரகாஷ் சாரும் சனாவோட அப்பாவும், அது எப்படியோ வேலுமணி கண்டு பிடிச்சு இருக்காரு, அங்க இருந்து காளி கிட்ட சொன்னதும், எந்த ஒரு சின்ன தகவலா இருந்தாலும் அவருக்கு தெரிய படுத்தலன்னு சொல்லி அடியாள அடிச்சி இருக்காரு டா… இப்ப இது விஷயம் இல்ல, அதை விட முக்கியமான விஷயம் என்னன்னா அந்த அடியாளுக்கு வந்த சந்தேகம் தான்” என்று சரவணன் கூறினான்.
“அப்படி என்ன டா சந்தேகம்” என்று அபிலாஷ் ஆர்வத்துடன் கேட்க, “காளி அண்ணா நிறைய வேலை பார்த்து இருக்காரு… அவ்வளவு ஏன் அவரே கூட அவர் கையால வெட்டி எல்லாம் கூட கொலை பண்ணிருக்காரு…. அப்ப எல்லாம் யோசிக்காத, பயப்படாத அவர், அபர்ணாவ பத்தியும் இந்த ஆக்சிடென்ட் பத்தியும் மட்டும் ஏன் யோசிக்கணும்… அதுவும் லாரியோட நம்பர் பிளேட்டும் பொய்.. எல்லாமே செட் பண்ணது தான்… அதனால அதிலிருந்து எப்படி தப்பிக்கணும்ன்றது கூட தெரிஞ்சும் ஏன் இவரு இந்த விஷயத்துல இன்னும் இப்படி பயப்பட்டுட்டு இருக்காருன்றது” தான் அந்த அடியாளோட சந்தேகம்” என்று சரவணன் கூறி முடித்தான்.
“அப்படின்னா அப்ப அவருக்கு எதிரா ஏதாவது எவிடன்ஸ் இந்த பக்கம் இருக்கும்னு நினைக்கிறாரோ??” என்று விக்ரம் கூறவும், “அதான் சனா இருக்கால அவ தானே எவிடென்ஸ்” என்று அபிலாஷ் கூறவும், “சனா எவிடன்ஸ் தான்… ஆனா, சனா எல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்ல… எவ்வளவோ பண்றாரு அவளையும் தட்டி தூக்கிட்டு போயிட்டே இருக்கலாம்” என்று விக்ரம் கூறவும்,
“அதுவும் சரி தான் விக்கி நீ சொல்றது….. அப்புறம் வேற என்ன இருக்கும்??” என்று குழப்பத்துடன் அபிலாஷ் கேட்க, “ஒரு வேள அப்பு கிட்ட ஏதாவது இருந்திருக்குமோ??” என்று சரவணன் கேட்டான்.
“எனக்கு இந்த யோசனை நம்ம அப்புவ பத்தி தெரிஞ்சுக்கிட்டு வந்தோம்ல அவ காலேஜுக்கு போயிட்டு அப்பவே இருந்துது… அப்பவே அவளுடைய திங்க்ஸ் எல்லாமே அலசி பார்த்துட்டேன் எதுவுமே இல்லை சந்தேக படுற மாதிரி…. வழக்கமா ஏதாவது எழுதி வைப்பா ஒரு நோட்ல அந்த நோட்டும் பார்த்துட்டேன் ஒன்னுமே இல்ல” என்று விக்ரம் கூறினான்.
“அதே மாதிரி அப்புவோட ஃபோன் கூட இன்னும் நமக்கு கிடைக்கவே இல்ல விக்ரம்” என்று அபிலாஷ் கூற, “ஆமாண்டா அது எவ்வளவு நாளா நானும் ரிக்வெஸ்ட் பண்ணிட்டே இருக்குறது…. ரிமைண்டரும் பண்ணிட்டு தான் இருக்கேன்… ஆனா, அங்க இல்லவே இல்லை கிடைச்சது ஒரே ஒரு ஃபோன் அதுவும் கூட இருந்த இன்னொரு ஆளோடது தான்னு சொன்னாங்க” என்று விக்ரம் கூறினான்.
“சரி நான் எதுக்கும் அந்த பையன் கிட்ட இந்த விவரத்தை சொல்லி வெக்கிறேன்… ஏதாவது தகவல் தெரிஞ்சா நமக்கு சொல்லுவான்” என்று சரவணன் கூறினான். இப்படி மூவரும் பேசிக் கொண்டிருந்து பிறகு அவர் அவர்களின் வேலையை காண சென்றனர்.
அன்று அனு வந்து அவளின் பரிசோதனைகளை முடித்து சிறிது நேரம் அமர்ந்திருக்கவும், “நான் உங்க கிட்ட டீடெயில்ஸ் கேட்டேனே” என்று அபிலாஷ் தயக்கத்துடன் கேட்க,
“நானும் நீங்க கேட்டத அப்பா கிட்ட கேட்டு இருக்கேன்… அதோட விவரம் கண்டிப்பா எடுத்து தரேன்னு சொன்னாரு…. அதே மாதிரி இப்படி தெளிவில்லாம விவரங்கள வேற யார் கிட்டயும் கேட்க வேணாம்னு சொன்னாரு…. அவரு இதை கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்காரு” என்று அனு கூறவும்,
“நிஜமா தான் சொல்றீங்களா??? கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாரா??” என்று அபிலாஷ் சந்தேகத்துடன் கேட்க, “கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்னு சொல்லி இருக்காரு நீங்க கவலைப்படாதீங்க” என்று அனு உறுதி அளித்தாள்.
கவிதாவின் கைபேசி ஒலிக்கவும் அவள் யாருமில்லாத இடத்திற்கு சென்று அட்டென்ட் செய்ய, ஹலோ!! என்று கௌதம் பேசவும், ஹ… ஹலோ!! என்று கவிதா தயக்கத்துடன் கூறினாள்.
“ஹப்பா இப்பவாவது என் ஃபோனுக்கு மெசேஜ் பண்ணனும்னு தோணுச்சே உனக்கு” என்று கௌதம் கேலியாக கூற, “ஹய்யோ அப்படி இல்ல… நீங்க நேர்ல வந்தா பேசணும்னு தான் இருந்தேன்…. அதுவுமில்லாம இந்த ரெண்டு நாள்லயும் பேசணும்னு ஆசையா இருந்துது… ஆனா, உங்க நம்பர் எப்படின்னே தெரியல போயிருச்சு…. நான் டெலிட் பண்ணல… அது எப்படின்னு எனக்கு தெரியல…. அதே மாதிரி சரவணன் அண்ணன் கிட்டயும் உங்க நம்பரை கேட்க எனக்கு ஒரு மாதிரி தயக்கமா இருந்துது…. அடுத்த நாள் விக்ரமும் இல்ல விக்ரம் இருந்திருந்தா கூட உங்க நம்பர கேட்டு இருப்பேன்” என்று கவிதா காரணங்களை அடுக்கினாள்.
அவளுக்கும் அவனிடம் பேச வேண்டும் என்ற ஆசை இருப்பதை கவிதா கூறவும், கௌதமுக்கு மிகவும் மகிழ்ச்சி. “சரி சரி இப்பவாவது பேசுறல எனக்கு அதுவே சந்தோஷம் தான் கவி” என்று கௌதம் கூறினான்.
“நீங்க ஏதோ முக்கியமான வேலையா வரலன்னு சொன்னாங்க…” என்று கவிதா கூறவும், “ஆமா ரொம்ப முக்கியமான வேலை… ஆனா முடிஞ்சிரும்னு நினைக்கிறேன், ஒரு ரெண்டு மூணு நாள்ல முடிஞ்சிருச்சுன்னா வந்துருவேன்” என்று கௌதம் கூறவும், “ரெண்டு மூணு நாள் ஆகுமா??” என்று சோகமான குரலில் கவிதா கேட்கவும், கௌதம் ரெக்கை கட்டி பறப்பது போல் உணர்ந்தான், தன்னை காண அவளும் ஏக்கத்துடன் இருக்கிறாள் என்பதை உணர்ந்து.
பின்பு கௌதம் தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு, “நானும் உன்ன ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் கவி… டெய்லி உன்கூட நடந்து பேசிட்டே போறத மிஸ் பண்ணுறேன்… நம்ம ஆத்து கிட்ட தண்ணீல விளையாடுறத மிஸ் பண்ணுறேன்…. உன்னோட சமையல மிஸ் பண்ணுறேன்… ஆக மொத்தம் உன்னையே முழுசா மிஸ் பண்ணுறேன் கவி” என்று கௌதம் கூறவும், கவிதா வெட்கத்துடன், “ம்ம்… ஆமா எனக்கும் அப்படித் தான் இருக்குங்க” என்று கூறினாள்.
“கூடிய சீக்கிரம் வரேன் மா…. எனக்கு உன்ன பார்க்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு கவி… அதுவும் நீ எனக்காக காத்துட்டு இருக்கேன்னு நினைச்சாலே எனக்கு இன்னும் சந்தோஷமாவும் இருக்கு ரொம்ப ரொம்ப ஆசையாவும் இருக்கு” என்று கௌதம் கூறவும், “எனக்கும் அப்படித் தான் இருக்கு” என்று கவிதா கூறினாள். இப்படி இருவரும் சிறிது நேரம் அவர்களின் காதலை பரிமாறிக் கொண்டு ஃபோனை வைத்தனர்.
சனந்தாவும் பாட்டியும் அவ்வழியாக வரவும், கவிதா ஃபோன் பேசி முடித்து அவர்களை பார்த்ததும் புன்னகையுடன், “பாட்டி நீங்க சொல்லும் போது நான் நம்பல ஆனா இப்போ நம்புறேன் பாட்டி உங்கள” என்று கவிதா இன்முகத்துடன் கூற, பாட்டி புன்னகையுடன், “நீ கண்டிப்பா ரொம்ப சந்தோஷமா இருப்ப… உன்னோட கனவுகள் எல்லாம் நினைவாகும்” என்று பாட்டி வாழ்த்தவும், கவிதா பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு, இருவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு சென்றாள்.
“இப்ப தான் கவிதா ரொம்ப சந்தோஷமா இருக்காங்கல பாட்டி” என்று சனந்தா கூறவும், “அதுக்கு முன்னாடி பாவம் ரொம்ப குழப்பித்துல தான் இருப்பா… எப்படியோ கவிதாவோட அப்பாவும் என் கிட்ட கொஞ்ச நாளுக்கு முன்னாடி பேசிட்டு போனாரு… அதனால அவளுக்கு இனிமே எந்த தடையும் இல்லாம அவ விருப்பப்பட்ட வாழ்கையை அமைச்சிக்க போறா” என்று பாட்டி கூறவும், “அப்படியா… பரவால்லையே… அவங்க அப்பாவும் இவ்வளவு சீக்கிரம் ஏத்துப்பாருன்னு நினைக்கல” என்று சனந்தா கூறினாள்.
“அது அப்படி தான் சனா, பெத்தவங்க புள்ளைங்களுக்கு இதான் சரியா இருக்கும்னு நம்புவாங்க… ஆனா, புள்ள அத விட இன்னோன்னுல சந்தோஷமா இருக்குன்னு தெரிஞ்ச அப்புறம் புள்ளையோட சந்தோஷம் தான் முக்கியம்னு இறங்கி வருவாங்க… அப்படி தான் அவரும் வந்தாரு… முக்கியமா கவிதாவோட முகத்துல பார்த்த சந்தோஷத்துனால தான் என்கிட்ட பேசவே வந்தாரு…. நானும் முதல்ல இருந்து சொன்னது தான்… அவ இங்க கிராமத்துல இருக்க மாட்டா… கண்டிப்பா அவளுக்கு பிடிச்சவங்களோட தான் வெளியே போவான்னு சொன்னேன்… அவரும் இந்த வாட்டி தான் முழு மனசோட கேட்டுட்டு போனாரு” என்று பாட்டி கூறினார்.
“கண்டிப்பா கௌதம் ரொம்ப நல்லா பார்த்துப்பான் பாட்டி… ம்ம் அப்புறம்… எனக்கும் ஏதாச்சும் சொல்லுங்களேன்” என்று சனந்தா ஆர்வமாக கேட்க, “உனக்கு தான் வந்த முதல் நாளே சொன்னேனே… எங்க ஊர் தேவதைய இழந்து வாடி இருந்த போது தான் நீ வந்த எங்கள காக்குறதுக்கு” என்று பாட்டி கூறவும்,
“ப்ச்… அதில்ல பாட்டி… நான் இங்க வந்து வாழ்வேனா??” என்று சனந்தா கேட்க, “முதல்ல உனக்கு இருக்குற பிரச்சனை எல்லாம் சரி பண்ணு… தானா பதில் கிடைக்கும்…. முக்கியமா நீ சரியான நேரத்துல அதுக்கு முயற்சி பண்ணு… எல்லாம் நீ நினைச்ச மாதிரியே நடக்கும்” என்று பாட்டி கூறவும், “இதுக்கு நான் கேட்காமலே இருந்து இருப்பேன்” என்று சனந்தா சலித்துக் கொள்ள, “வந்த வேலையை பார்ப்போம் வா” என்று பாட்டி கூறி இருவரும் சென்றனர்.
கௌதமும் கவிதாவும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஃபோனில் அவர்களின் காதலை வளர்த்துக் கொண்டிருந்தனர். மேலும் சனந்தாவும் விக்ரமும் அவ்வப்போது பேசிக் கொள்வது இருவரும் ஒன்றாக கோயிலுக்கு செல்வது என அவர்களின் காதலையும் வளர்த்துக் கொண்டிருந்தனர். இப்படியே அழகாக சில நாட்கள் அனைவருக்கும் கழிந்தது.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 83
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 83
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.