Chapter-32

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
246
0
16
www.amazon.com
பல வருடத்திற்கு பிறகு தங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் அனைத்தையும் மறந்து விட்டு விக்ராந்த், மனோ, மோனிஷா மூவரும் இணைந்தார்கள்.

அவர்களைப் பார்த்தபடி சோனியாவுடன் கீழே சென்ற சார்லி “என்ன chief இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது!” என்று விக்ராந்தை பார்த்து கேட்க,

“டேய் நீயும் ஏன்டா மத்தவங்க மாதிரி என்னை chief chiefன்னு கூப்பிடுற?

நம்ம என்ன அப்படியா பழகி இருக்கோம்? இனிமே என்னை எப்பயும் போல விக்கின்னே கூப்பிடு.” என்று சிரித்த முகமாக அவனைப் பார்த்து சொன்னான் விக்ராந்த்.

“அடப்பாவி டேய் பேசுறது நீதானா? இல்ல உன் உடம்புல வேற எவனாவது ஒருத்தனுடைய ஆவி வந்து புகுந்துடுச்சா?

இத்தனை நாளா இந்த smiling faceஐ எங்கடா ஒளிச்சு வச்சிருந்த?

நீயும் நானும் முன்னாடில இருந்து ஃப்பிரண்டா இருந்தோம்னு நானே மறக்கர அளவுக்கு தான் இத்தன வருஷமா நீ என்கிட்ட பிகேவ் பண்ணிட்டு இருந்த..

இப்ப என்ன ஒரே நாள்ல ஆளே மாறிட்ட?” என்று சார்லி அவனைப் பார்த்து நம்ப முடியாமல் கேட்க,

விக்ராந்தின் தோள்களில் கை போட்டவாறு அவன் அருகில் நின்று கொண்டிருந்த மனோ,

“எல்லாம் எங்க அண்ணி வந்த நேரம் தான் ப்ரோ! இனிமே விக்கி எப்படி இருக்க போறான்னு நீங்க பாருங்க!

இப்ப உங்க முன்னாடி நிக்கிறது உங்க chief கிடையாது. விக்கி வர்ஷன் 2.0.” என்று சொல்லிவிட்டு சிரிக்க,

அவன் அண்ணி என்று ஷாலினியை தான் குறிப்பிடுகிறான் என்று புரிந்து கொண்ட சார்லி

“அந்த பொண்ணு எப்ப இவன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ரெடியான?

என்ன ஒரே நாள்ல புதுசு புதுசா நிறைய நடக்குது!” என்று நினைத்து அவர்களை ஆச்சரியமாக பார்த்தான்.

அப்போது அஜய், துருவ் மற்றும் சந்துருவுடன் அங்கே வர,

அவனைப் பார்த்த விக்ராந்த் “வாடா மச்சான் வாடா மச்சான்.. நான் மோனிஷாவுக்கும், துருவுக்கும் சீக்கிரம் மேரேஜ் பண்ணி வைக்கணும்னு ஆல்ரெடி சொல்லிட்டு இருந்தேன்ல..

இப்போ அவங்களுக்கு ‌ மேரேஜ் பண்ணும்போது கையோட நானும் ஷாலினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.

இந்த ரெண்டு மேரேஜ்ஜையும் நீங்கதான் நடத்தி வைக்கணும்.

இதை எப்படி பண்ணனுமோ அந்த மாதிரி ப்ராப்பரா எல்லா சாஸ்திரம் சம்பிரதாயமும் செஞ்சு பண்ணனும் டா.

ஏதோ நல்ல நேரம் எல்லாம் பாக்கணும்னு சொல்லுவானுங்களே..

ஒரு நல்லா ஐயரா பார்த்து தூக்கிட்டு வாங்க. மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணிடலாம்.

எங்க மேரேஜ் கிராண்டா நடக்கணும்.” என்றான்.

அவன் எப்படி இருந்தாலும் ஷாலினியுடன் சேர்ந்து வாழ்வதாக சொல்வான் என்று ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தான் அஜய்.

ஆனால் ஊரறிய அவன் அவளை திருமணம் செய்து கொண்டு அவளுடன் சேர்ந்து வாழ நினைப்பான் என்று எதிர்பார்த்து இருக்காதால் ஷாக் ஆகி அவனை பார்த்த அஜய்,

“மோனிஷா துருவ் மேரேஜ் எந்த பிரச்சினையும் இல்ல.

அத நம்ம எவ்வளவு கிராண்டா வேணும்னாலும் பண்ணலாம்.

பட் ஷாலினி கூட உனக்கு எப்படிடா? நம்ம எந்த மாதிரி சுச்சுவேஷன்ல ஷாலினியை கடத்தி இங்க தூக்கிட்டு வந்தோம்னு உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?

நம்ம ஃபேமிலில கிராண்டா ஒரு மேரேஜ் நடந்துச்சுன்னா, அது உடனே ட்ரெண்ட் ஆகி நியூஸ்ல வந்துரும் டா.

ஷாலினி அந்த பையன் கூட வாழ்ந்த கிராமத்தில இருக்கிறவங்க அதை பார்த்துட்டு அவ எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சு பிரச்சனை பண்ண மாட்டாங்களா?

முதல்ல உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஷாலினி ஓகே சொல்லணும் இல்ல!

அவகிட்ட பேசிட்டியா?” என்று கேட்டான்.

அவன் சொன்ன பிறகுதான் அந்த ஊர் மக்களை சமாளிக்க வேண்டும் என்பது பற்றியே விக்ராந்திற்கு ஞாபகம் வந்தது..

அதனால் “நீ சொல்றதும் கரெக்ட் தான் டா.. எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணிட்டு கடைசியில எங்களுக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் அந்த ஊர்காரனுங்க போலீஸ் ஸ்டேஷன்ல போய் நடந்தது எல்லாத்தையும் சொல்லி கம்ப்ளைன்ட் பண்ண அது ஒரு தேவை இல்லாத பிரச்சனை!

இப்ப இதை சமாளிக்கிறதுக்கு என்னடா பண்றது?” என்று விக்ராந்த் கேட்க,

“இதை சாமியாளிக்குறதுக்கு ரெண்டே ஆப்ஷன் தான் இருக்கு.

ஒன்னு, நம்ம மறுபடியும் அந்த கிராமத்துக்கு போய் அங்க இருக்குறவங்கள நடந்த விஷயத்தை பத்தி வெளியே யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு மிரட்டணும்.

நம்ம அப்படி பண்ணிட்டாலும் நமக்கே தெரியாம அவங்க மறுபடியும் மீடியா பக்கம் போனாலோ, நீ சொன்ன மாதிரி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் எப்படி பார்த்தாலும் பிரச்சனை தான்.

நம்மளால எப்பவுமே அவங்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்க முடியாது.

இரண்டாவது ஆப்ஷன் டைரக்டா ஷாலினியோட பேரண்ட்ஸ் கிட்ட போய் ஷாலினிய பொண்ணு கேக்கணும்.

அவங்க நீ யாருன்னு தெரிஞ்சா கண்டிப்பா பொண்ணு தரேன்னு தான் சொல்லுவாங்க.‌

சோ பிரச்சனை இல்லாம அவங்க ஃபேமிலிய இதுக்குள்ள இன்வால்வ் பண்ணா,

விஷ்ணுவுக்கும், ஷாலினிக்கும் ஆல்ரெடி ஊர்ல கல்யாணம் ஆனது நமக்கு இப்பதான் தெரிஞ்ச மாதிரி சீன் போட்டு ஷாலினியோட பெத்தவங்கள வச்சே அவங்க ரெண்டு பேத்தையும் பிரிச்ச மாதிரி அந்த ஊர்க்காரங்க முன்னாடி டிராமா போட்டு எல்லாரும் நம்ப வைக்கலாம்.

விஷ்ணுவையும் மிரட்டி அவனே ஷாலினியை வாலண்டியரா விட்டுட்டு போற மாதிரி எல்லார் முன்னாடியும் சொல்ல சொல்லலாம்.

அவங்களும் விஷ்ணு ஏழையா இருக்கறதுனால அவனுக்கு ஷாலினியை கல்யாணம் பண்ணி கொடுக்க விருப்பம் இல்லாம அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சிட்டு உனக்கு ஷாலினிய அவங்களோட அப்பா அம்மா கல்யாணம் பண்ணி குடுக்கிறதா நினைச்சுக்குவாங்க.

சோ நீங்க அன்னைக்கு போய் பண்ணிட்டு வந்தது எல்லாத்தையும் குடும்பப் பிரச்சினைன்னு நினைச்சு மறந்து விட்டுடுவாங்க.

இப்படி பண்ணிட்டா நமக்கு என்ன பிரச்சனையும் வராது.

இது அரேஞ்ச் மேரேஜ் மாதிரி வேலை சீன் போட்டுக்கலாம்.” என்று கேஷுவலாக அவனுக்கு ஐடியா கொடுத்தான் மனோ.

அவன் சில நொடிகளில் இவ்வளவு தூரம் யோசித்து தனக்கு ஐடியா கொடுத்ததால் அவனை பெருமையாக பார்த்த விக்ராந்த்,

“இது தாண்டா பிசினஸ் மேன் brain. எப்படி எல்லாம் யோசிக்கிற நீ?

நீ மட்டும் முன்னாடில இருந்தே என் கூட இருந்து நான் பண்ற எல்லாத்தையும் இன்வாழ்வு ஆகி இருந்தா, இன்னும் நம்ம எங்கயோ போயிருப்போம் டா.” என்று உற்சாகமான குரலில் சொன்னான்.

“டேய் இப்ப தானே ஷாலினிக்காக திருந்தி அதெல்லாம் வேண்டாம்னு டிசைட் பண்ண!

இப்ப உனக்கு மறுபடியும் புத்தி ஏன்டா அங்க போகுது?” என்று மனோ அவனைப் பார்த்து முறைத்தபடி கேட்க,

“ஓகே ஓகே ரிலாக்ஸ், டென்ஷன் ஆகாதடா தம்பி..

உன் அண்ணன் இப்ப லவ் பண்ணனும், கல்யாணம் பண்ணனும், குழந்தை எல்லாம் பெத்துட்டு செட்டில் ஆகணும்னு முடிவுக்கு வந்துட்டேன்.

சோ மறுபடியும் அந்த மாதிரி எல்லாம் யோசிக்க மாட்டேன். நீ என்ன நெனச்ச கவலைப்படாத.” என்ற விக்ராந்த் அஜய் இடம் மனோ சொன்ன பிளானை எக்ஸிக்யூட் செய்ய சொல்லிக் கொண்டிருந்தான்.‌

அப்போது மனோவை தேடிக் கொண்டு படிகளில் கீழே இறங்கி வந்த தியா அங்கே விக்ராந்த் உட்பட அனைவரும் நின்று கூட்டமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தயக்கமாக ஒரு ஓரத்தில் நின்றாள்.

அவளைப் பார்த்த மனோ “இங்க வா!” என்று சொல்ல, எஜமானரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட பூனைக் குட்டியை போல அவனைப் பார்த்து வேகமாக நடந்து வந்தாள் தியா.

அவன் அன்புடன் அவளை பார்த்து “சாப்டியா?” என்று கேட்க, “இல்ல பாஸ், உங்களுக்காக தான் நான் இங்க ஸ்டே பண்ணி இருக்கேன்.

நீங்க சாப்பிடாம நான் எப்படி சாப்பிடுறது?” என்று மெல்லிய குரலில் அவனை பார்த்து கேட்டாள் தியா.

“இனிமே நான் இங்க தான் இருக்க போறேன்.

நீ என் பர்சனல் அசிஸ்டன்ட் தானே.. சோ நான் எங்க இருக்கனோ நீயும் அங்கதான் இருக்கணும்.

நான் உன் கூட ஆளுங்களை அனுப்புறேன். என் வீட்ல இருக்கிற என் முக்கியமான திங்ஸ் எல்லாத்தையும் எடுத்து பேக் பண்ணிட்டு,

வர்ற வழியில உன்னுடைய திங்சையும் எடுத்துக்கிட்டு நீ இங்க வந்துரு.” என்று மனோ அவளிடம் சொல்ல,

“என்ன சொல்றீங்க நீங்க இங்க தங்க போறீங்களா?

அப்படியே இருந்தாலும் என்னால எப்படி உங்க கூட இங்க தங்க முடியும்?

எனக்கு விக்ராந்த் சாரை பார்த்தாலே பயமா இருக்கும்.” என்று தன்னை எறியாமல் ஆர்வக்கோளாறில் மனோவிடம் மனதில் இருந்தவற்றை அப்படியே சொல்லி விட்டாள் தியா.

அதனால் மனோ உடனே அவளை முளைத்து பார்க்க, அதற்கும் பயந்து நடுங்கிய தியா,

“ஐயோ சாரி சாரி பாஸ்! தெரியாம சொல்லிட்டேன்.” என்று உடனே அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.

அவள் அப்படி மிகவும் பயந்தவளாகவும், அப்பாவியாகவும் இருப்பதைக் கண்டு கிண்டலாக புன்னகைத்த மனோ,

“நான் சொன்னது உனக்கு நல்லா கேட்டுச்சு தானே! அப்புறம் அதுல உனக்கு என்ன டவுட்?

நான் எங்க இருக்கனோ, அங்கதான் நீயும் இருக்கணும்.

அதுதான் உனக்கு வீடு. புரி
ஞ்சுதா?” என்று தனது ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தி அழுத்தி கேட்க,

“எஸ் பாஸ்” என்று உடனே வேகமாக தலையாட்டினாள் தியா.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-32
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.