Chapter 71

Bhavani Varun

Member
Jan 23, 2025
83
0
6
என்ன தான் விக்ரம் சனந்தாவை அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று சந்திரசேகரிடம் கூறினாலும் எங்கே சரி என்று கூறிவிடுவாறோ என்ற பயத்துடனே தான் பேசினான் விக்ரம். ஆனால் சனந்தாவும் அங்கு இருக்க விருப்பப்படுகிறாள் என்பதை புரிந்து கொண்டு சந்திரசேகர் அதை மறுத்ததும் தான் விக்ரமுக்கு நிம்மதியை அளித்தது.

“ஆமா விக்ரம் முதல் வாட்டி வீட்டுக்கு வந்த போனப்பவே என்கிட்ட சனா கேட்டா எக்ஸ்டென்ட் பண்ண என்ன பண்ணனும் அங்கிள்னு…. நானும் அப்படி எக்ஸ்டென்ட் பண்ணி தானே அங்க சில வருஷம் இருந்தேன்…. அப்படித் தான் அவளுக்கும் உங்களை எல்லாரையும் பிடிச்சிருச்சு போல… அதுவும் இல்லாம சனா ரொம்ப ஆட்களோட பழகுற ஆள் இல்லப்பா அங்க எல்லாரும் அவகிட்ட பேசி பழகுறதும் பிடிச்சிருக்குன்னு சொன்னா என்கிட்டயும்… அதனால அங்க இருக்க ஆசைபடுறா போல” என்று பிரகாஷ் கூறவும் விக்ரம் புன்னகையுடன் தலையை அசைத்தான்.

“ஆங்… அப்புறம் விக்ரம் இன்னொரு முக்கியமான விஷயம் கேட்கணும் உன்கிட்ட…. கெளதம் வந்து என்கிட்ட பேசின வரைக்கும் பார்த்தா அவனக்கு கவிதாவ புடிச்சிருக்கு போலயே” என்று பிரகாஷ் கேட்கவும், விக்ரம் என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தான்.

“அவனே என்கிட்ட சொல்லிட்டான் பா… ஆனா, எனக்கு இருக்கிற ஒரே கவலை எங்க கவிதாவோட அப்பா கிட்ட அடி வாங்கிட்டு வீட்டுக்கு வந்து சேருவானோன்னு தான்” என்று பிரகாஷ் கூறவும், விக்ரம் புன்னகைத்து, “இல்ல இல்ல சார் அவங்க அப்பா கிட்டயும் கௌதம் பேசிட்டான்…. அத இன்னும் உங்களுக்கு சொல்லல போல” என்று விக்ரம் சிரித்துக் கொண்டே கூற, “அடப்பாவி இத வேற பண்ணிட்டானா அவன்” என்று பிரகாஷ் ஆச்சிரியத்துடன் கூறினார்.

“என்னடா இது முதல்ல கௌதமுக்கு கல்யாணம் முடிஞ்சுரும் போலயே” என்று சந்திரசேகர் கூறவும், “அப்படி அவன் சந்தோஷமா இருந்தா எனக்கும் நிம்மதி தான்… முதல்ல பிரேக்கப் ஆனப்போ அவன பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்துது… சனா அவனை கூடயே தான் வெச்சிருந்தா அவனும் அப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா சரியாகி வந்தான்”….

“அப்போ நான் நினைச்சேன் இவன் திருப்பி லவ் பண்ணுவானா இல்ல நான் தான் அரேஞ்ச் மேரேஜ் எல்லாம் பண்ணி வெக்கனும்மான்னு யோசிச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்…. எப்படியோ இப்போ கவிதாவ புடிச்சிருக்கு… இது சக்சஸ் ஆனா எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்… அவங்க அப்பா கிட்ட வேற பேசிட்டான்னு சொல்லுற இதெல்லாம் நல்ல படியா நடந்தா அதுவே போதும்” என்று பிரகாஷ் மனதார கூறினார்.

“சரி, கௌதம விடு விக்ரம் உனக்கு எப்ப கல்யாணம்??” என்று பிரகாஷ் கேட்க, “பார்க்கலாம் சார் வீட்லயும் சொல்லிட்டு இருக்காங்க எல்லாம் அமைஞ்சி வந்தா செஞ்சுக்க வேண்டியது தான் சார்” என்று விக்ரம் கூறினான்.

“உன்ன விட சின்ன பையன் கௌதம் அவனே கல்யாணத்துக்கு ரெடியா இருக்கிறான்” என்று பிரகாஷ் கூறவும், “அப்படி இல்ல சார் கௌதமுக்கும் அதுக்கான வயசு ஆயிருச்சு அதனால கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன சார் இருக்கு” என்று விக்ரம் கேட்கவும்,

“அவனுக்கு கூட கல்யாணம் ஆயிரும் போல ஆனா, இந்த சனா என்ன பண்ணும்னே தெரியல எங்களுக்கு…. இன்னம் கொஞ்சம் மாசத்துல விகாஷ் கூட படிப்பு முடிச்சுட்டு வந்துருவான் அவனும் வந்து பிசினஸ்ல இறங்கிடுவான்… இவ இதுக்கு அப்புறம் பி.ஹெச்.டி படிச்சு அதுக்கப்புறம் அவளை எப்ப தான் கல்யாணம் பண்ணி கொடுக்க போறோமோ நாங்க” என்று சலித்துக் கொண்டு கூறினார் சந்திரசேகர்.

“அப்படி இல்ல சார்… எங்களுக்கு எல்லாம் சனந்தாவை பார்த்தா உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியமா இருக்கும்… ஒரு நல்ல வெல் டு டூ ஃபேமிலில இருந்து வந்த ஒரு பொண்ணு இவ்வளவு பொறுப்பா அவங்களுக்கான விஷயத்தை பார்க்குறது மட்டும் இல்லாம… ஒரு சோசியல் கன்சர்னோடவும் நடந்துக்கிற மாதிரி பசங்க இப்ப எங்க சார் இருக்காங்க”…

“அதுவும் எங்க கிராமத்துக்கு வந்து எங்களுக்கு ஹெல்ப் பண்றவங்களுக்கு எல்லாம் உண்மையிலேயே ரொம்ப பெரிய மனசு இருக்குன்னு நாங்க எப்பவுமே நினைப்போம்… அதுவும் வாலன்டியர் டீச்சரா இதுவரைக்கும் நிறைய பேர் வந்திருக்காங்க எல்லாருமே ஒரு அளவுக்கு ஃபேமிலி உள்ளவங்க இல்ல வயசானவங்க இப்படித் தான் வந்துருக்காங்க…. ஆனா சனந்தா மட்டும் தான் சின்ன பொண்ணு… அவங்க வந்ததும் இல்லாம எங்களுக்கும் நிறைய சொல்லிக் கொடுக்குறாங்க… பசங்களுக்கும் நிறைய பண்றாங்க…. இப்படி பொறுப்பா இருக்குற பசங்க இருக்காங்கன்னு நீங்க சந்தோஷம் தான் சார் படனும்” என்று விக்ரம் சனந்தாகாக பரிந்து பேசவும் சந்திரசேகர் புன்னகைத்துக் கொண்டார்.

“அப்படி சொல்லு விக்ரம்…. இப்படியும் ஒரு புள்ள இருக்குதுன்னு எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாது… எப்ப பாரு சனாவ ஏதாவது குறை சொல்லிட்டே தான் இருப்பாங்க” என்று பிரகாஷ் சந்திரசேகரை குறை கூறவும், “ஆமா சனந்தாக்கு ஒன்னுன்னா இவன் வந்துருவான்” என்று சந்திரசேகர் கூறவும், “ஆமாண்டா எனக்கு அப்படி ஒரு பொண்ணு இல்லையேன்னு நான் உண்மையிலேயே ஏங்கி இருக்கேன்…. எனக்கு அவ பொறந்ததுல இருந்து அவ்வளவு பிடிக்கும் சனாவ” என்று பிரகாஷ் கூறினார்.

“சரி சரி அதெல்லாம் விடு விக்ரம் வேலுமணிய பத்தி ஏதாவது விவரம் தெரிஞ்சதா??” என்று பிரகாஷ் கேட்கவும், “எதுவும் தெரியலைங்க சார் அவங்க அமைதியா அவங்க வேலைய பார்த்துட்டு இருக்காங்க அவ்வளவு தான்…. ஆனா காளி மட்டும் சனந்தாவ பத்தி விசாரிக்க சொல்லி இருக்காருன்றது மட்டும் தான் நமக்கு கிடைச்சிருக்க தகவல்” என்று விக்ரம் கூறவும், “சரி அப்ப சனந்தாவை கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பார்த்துக்கணும்” என்று பிரகாஷ் கூறினார்.

“அவங்க கண்டிப்பா எங்க கூட பாதுகாப்பா தான் இருப்பாங்க சார்…. அந்த நம்பிக்கையை நாங்க உங்களுக்கு கொடுக்குறோம்” என்று விக்ரம் கூறவும், “அது எனக்கு தெரியாதா விக்ரம்… நம்ம கிராமத்துல யாராலையும் கை வைக்க முடியாது…. அங்க கை வெச்சா என்ன நடக்கும்னு கை வெக்கிறவனுக்கு நல்லாவே தெரியும்…. அதனால சனா அங்க இருக்குற வரைக்கும் ரொம்பவே சேஃப்” என்று பிரகாஷ் கூறினார்.

“சரி ரொம்ப நேரம் நம்ம வெளியில இருந்தோம்னா ரெண்டு வானரமும் எப்ப வேணாலும் எந்திரிச்சு வெளியில வந்துரும் வாங்க போலாம்” என்று சந்திரசேகர் கூறவும், சனந்தா மற்றும் கௌதமை தான் வானரம் என்று கூறுகிறார் என்று உணர்ந்து விக்ரம் சிரித்துக் கொண்டான்.

“சரி டா அதெல்லாம் இருக்கட்டும் கவிதாவோட அப்பா நீ என்ன வேலை பார்க்குற அப்படின்னு கேட்டார்னா என்ன பதில் சொல்லுவ??” என்று சனந்தா கேட்க, “எனக்கும் அவங்க அப்பா கிட்ட பேசினதுக்கு அப்புறம் தான் இது தோணுச்சு… அதனால, சீனியர் கிட்ட கேட்டேன் அவர் ஒரு ஃபுட் ப்ராடக்ட் கம்பெனியில் ரெஃபர் பண்றேன்னு சொன்னாரு…. அதுவும் இல்லாம இப்ப ரீசர்ச் வேற பண்ணிட்டு இருக்கோம்ல சோ இதையும் சேர்த்து வெச்சு எனக்கு வேலை பார்த்து தரேன்னு சொன்னாரு” என்று கௌதம் கூறினான்.

“அப்ப எல்லாம் ரெடியா தான் இருக்க…. கவிதா ஓகே சொல்லிட்டா எப்படி கல்யாணம் கூட முடிச்சு கையோட கூட்டிட்டு வந்துடுவியா என்ன??” என்று சனந்தா கேலியாக கேட்க, “நீ சொன்னாலும் சொல்லலனாலும் அதை பண்ணிடுவேன் தான்… நமக்கு என்ன இருபத்தி அஞ்சு வயசு ஆயிடுச்சு…. இன்னும் சொல்ல போனா எனக்கு இருபத்தி ஆறு ஆக போது… கவிதாவுக்கும் ஏறக்குறைய அதே வயசு தான் அதனால பிரச்சனை இல்ல” என்று கௌதம் கூறினான்.

“எப்படிடா இந்த விவரம் எல்லாம் கலெக்ட் பண்ற நீ மட்டும்” என்று சனந்தா அவனை ஆச்சரியத்துடன் கேட்க, “எல்லாமே பண்ணனும்… லவ்வுன்னு வந்துட்டா இறங்கி ஒரு அலசு அலசிடனும்” என்று கௌதம் கூறவும், “தெரியுது எவ்வளவு நல்ல அலசி இருக்கேன்னு ரொம்பவே நல்லா தெரியுது” என்று சனந்தா கேலியாக கூறினாள்.

“சரி அதெல்லாம் இருக்கட்டும் விக்ரமோட வயசு தெரியுமா உனக்கு??” என்று கௌதம் கேட்கவும், “என்ன விட பெரியவருன்னு மட்டும் தான் தெரியும்” என்று சனந்தா கூறினாள்.

கௌதம் தலையில் அடித்துக் கொண்டு, “உனக்கு அவரோட வயசே தெரியல சனா… இது ரொம்ப பேஸிக்கான ஒரு விஷயம்… நம்ம வீட்ல நம்ம லவ்வ பத்தி பேசுறோம்னா நம்ம சைடுல எல்லாம் பார்த்தா கண்டிப்பா பொண்ண விட பையன் தான் பெரியவங்களா இருக்கணும்னு எதிர்பாப்பாங்க”…..

“நம்ம பேரண்ட்ஸ் இல்லனாலும் அந்த கிராமத்துல உள்ளவங்களாவது அப்படி எதிர் பார்ப்பாங்க தானே…. அது தான் ஒரு அடிப்படை விஷயமே அதுவே உனக்கு தெரியல அப்ப என்ன தான் உனக்கு அவர பத்தி தெரியும்??” என்று கௌதம் கேட்கவும், “தெரிஞ்சுக்குறேன் டா இனிமே எல்லாமே தெரிஞ்சுக்குறேன் டா கண்டிப்பா… முக்கியமா நீ என்னை கேள்வி கேட்காத மாதிரி நான் எல்லா விவரமும் தெரிஞ்சுக்கிறேன்” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம்… எனக்கே தெரியும் அவருக்கு இப்ப போன பர்த்டேயோட இருபத்தி ஒன்பது வயசு ஆகுது… அவங்க தங்கச்சி அபர்ணாவுக்கு நம்ம வயசு தான்” என்று கௌதம் கூறவும், “அப்படியா இதெல்லாம் எப்படிடா உனக்கு தெரியும்??” என்று சனந்தா கேட்க, “சரவணன் கிட்ட சும்மா பேசும் போது கேட்டேன்” என்று கௌதம் கூறினான்.

“ம்ம்…. அபர்ணாக்கு எப்படி நம்ம வயசு இருக்கும் இன்னும் சின்ன பொண்ணா தானே இருக்க முடியும்…. அவங்க இப்ப தானே செகன்ட் டிகிரி படிக்கிறதா சொன்னாங்களே??” என்று குழப்பத்துடன் சனந்தா கேட்க,

“அதான் டி இந்த ஊர்ல இருந்து பசங்க படிக்க போறதுக்கு எப்படியும் ரெண்டு வயசு ஆவது டிலே ஆகுதுன்னு சொல்லி தானே நீ கரிக்குளம் மாத்தி சர்டிஃபிகேட் எல்லாம் வாங்கலாம்னு சொல்லி ஐடியாவே கொடுத்த…. அதனால தான் அவங்க படிக்கும் போது ரெண்டு வருஷம் டிலே…. அதுவும் இல்லாம ஃபர்ஸ்ட் டிகிரி முடிச்சிட்டு கொஞ்சம் வேலை பார்த்துட்டு அதுக்கப்புறம் தான் படிக்க போனாங்கனு சொன்னாரு சரவணன்…. கவிதாவுக்கும் அபர்ணாக்கும் ஏறக்குறைய ஒரே வயசு…. அப்படி பார்த்தா நீ நான் கவிதா அபர்ணா நாலு பேரு ஒரே வயசு…. நமக்கும் விக்ரம் சரவணனுக்கும் ஒரு நாலு வயசு வித்தியாசம் இருக்கு” என்று கௌதம் கூறினான்.

“ஆனா உண்மையிலேயே இதெல்லாம் நல்லா ஆராய்ச்சி பண்றடா…. நான் ஏதாவது ஒரு வேலை சொன்னா மட்டும் இது சொட்டை இது நோட்டன்னு என்னை திட்டிக்கிட்டே வேலை பார்ப்ப…. ஆனா, இந்த வேலைய பார்க்க சொன்னா நல்லா பார்க்குற நீ” என்று சனந்தா கேலியாக கூறவும், “உனக்கு போய் தேவையான இன்ஃபர்மேஷன் சொன்னேன் பார்த்தியா… ஹய்யோ!!! எனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்” என்று கௌதம் சனந்தாவின் தலையில் அடிக்கப் போகவும், விக்ரம் சந்திரசேகர் மற்றும் பிரகாஷ் வந்து சேர்ந்தனர்.

“அடேய் ஏன்டா அவளை அடிக்க போற நீ??” என்று பிரகாஷ் கேட்க, சனந்தா வேண்டுமென்றே போலியாக கண்ணை கசக்கி கொண்டு, “அங்கிள் இவ்வளவு நேரம் அடிச்சிட்டு தான் இருந்தான்” என்று போலியான அழுகையுடன் பேச, விக்ரமுக்கு சிரிப்பாக வந்தது. “என்னடா இது இப்படி குழந்தை மாதிரி பேசிட்டு இருக்கா??” என்று அவள் பேசியதை ரசித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

“இரு சனா நான் பார்த்துக்குறேன் அவன…. என்ன நினைச்சிட்டு இருக்க நீ எதுக்குடா அவளை அடிக்குற?” என்று பிரகாஷ் கௌதமை மிரட்ட, “அய்யோ பிரகாஷ் சும்மா விடுடா அவளும் ஏதோ விளையாடிட்டு தான் இருந்திருப்பா” என்று சந்திரசேகர் கூறவும், “அதுக்காக வளர்ந்த பிள்ளையை அடிக்க போலாமா??” என்று பிரகாஷ் கேட்கவும்,

“ரெண்டும் விளையாடிட்டு ரெண்டும் ஒன்னு சேர்ந்துட்டு நம்ம ரெண்டு பேர தான் கோமாளியாக்கும்… இது தெரிஞ்ச கதை தானே…. ஒவ்வொரு வாட்டியும் நீ சனாவுக்கு சப்போர்ட் பண்ணுவ…. கடைசியா, “அங்கிள் கௌதம் தான் எனக்கு பெஸ்ட் ஃபிரண்ட் நீங்க அவன திட்டாதிங்கனு” சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் அதை தான் அவளும் சொல்றா நீயும் அது தெரிஞ்சும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி இவன திட்டுவ…. இதெல்லாம் காலம் காலமா நடக்குது ரெண்டு பேரும் எந்திரிச்சு வாங்க வீட்டுக்கு போலாம்” என்று சந்திரசேகர் கூறவும் அனைவரும் கிளம்பினார்கள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல

எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 71
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.